‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி திருச்சியில் 05-01-2020 அன்று நடைபெற்றது
202 ரசிகர் நற்பணி இயக்க உறுப்பினர்கள் குடும்பத்தில் அனுமதி பெற்று திருச்சி ரசிகர் நற்பணி இயக்க அலுவலகத்தில் அரசு மருத்துவமனை உடல் உறுப்பு தானம் பிரிவு அதிகாரியிடம் உடல் உறுப்பு தான செய்த சான்றிதழ்களை சமர்பித்தனர்.
இது இந்திய வரலாற்றில் முதல் முறையாக திருச்சி மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் நற்பணி இயக்க நிர்வாகிகள் வழங்கினர்கள்.
வருடாந்திர உடல் உறுப்பு தானம் செய்பவர் தமிழ்நாட்டு கணக்கெடுப்பில் 2016இல் 185 பேரே அதிகபட்சமானது.
மேலும் இதுநாள் வரையில் தமிழ்நாட்டில் உடலுறுப்பு செய்தவர்கள் மொத்த எண்ணிக்கையே 1338தான்.
ஆனால், 05-01-2020 அன்று ஒரே நாளில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி நிர்வாகிகள் 202 நபர்கள் உடல் உறுப்பு தானம் செய்து அசத்தினர்.
இடம்: இந்திராணி டவர் திருச்சி.
நாள் : 05-01-2020