April 24, 2024
  • April 24, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அரை நிர்வாணமாக்கி மிரட்டிய அசிஸ்டன்ட் டைரக்டர் மீது செம்பருத்தி நடிகை போலீசில் புகார்
April 23, 2021

அரை நிர்வாணமாக்கி மிரட்டிய அசிஸ்டன்ட் டைரக்டர் மீது செம்பருத்தி நடிகை போலீசில் புகார்

By 0 367 Views

சென்னை மணலி, பல்ஜிபாளையம், சின்னசேக்காட்டைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 25).

சின்னத்திரை ஜூனியர் ஆர்டிஸ்டான இவர் பிரபல சீரியல் ஒன்றில் நடிச்சு வருகிறார். வானத்தை போல, அதற்கு முன்பு செம்பருத்தி தொடரில் உமா ரோலில் நடித்து பிரபலமானவர்.

அவர் இன்று காலையில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் அவர் கூறியிருந்தது…

‘‘நான் என் கணவர் சரவணனை கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பிரிந்து விட்டேன். இந்நிலையில் நான் நடிக்கும் சீரியலில் அசிஸ்டெண்ட் டைரக்டராகப் பணியாற்றி வந்த நவீன்குமார் என்பவர் என்னுடன் நெருக்கமாகப் பழகினார்.

நான் என் கணவரை விவாகரத்து கேட்டு விண்ணப்பித்த விஷயம் அவருக்கு தெரியும். அந்த சூழலில் அவர் என்னை காதலிப்பதாவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். இதற்கு அவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். நானும் அவரிடம் நல்ல முறையில் பழகினேன்.

இந்நிலையில் போகப்போக நவீன்குமார் என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை செய்ய ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் என் நடத்தையில் சந்தேகப்பட்டு என்னை அடித்து துன்புறுத்தினார். காரில் என்னை அழைத்துச் சென்று அடித்து, உதைத்து கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்கி ஆடைகளை களைந்து வீடியோ எடுத்து சைக்கோ போல நடந்து கொண்டார்.

இதனால் நான் அவரை திருமணம் செய்ய மறுத்து அவரை விட்டு விலகினேன். ஆனால் என்னிடம் மறுபடியும் 5 லட்சம் பணம் தரும்படி கேட்டு மிரட்டினார். என்னால் முடியாது என்றேன்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் கடந்த 17ம் தேதியன்று மணலியில் நான் என் தங்கையுடன் காரில் சென்ற போது அடியாட்களை அழைத்து வந்து என் தங்கையின் ஆடைகளை கிழித்து மானபங்கப்படுத்தினார்.

அது தொடர்பாக மணலி போலீசில் புகார் அளித்தேன். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் நான் அளித்த புகாரை வாபஸ் வாங்கவில்லை என்றால் நவீன்குமார் அந்தரங்க அறையில் என்னை அரை நிர்வாணமாக எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்டெர்நெட்டில் போட்டு மானத்தை வாங்கி விடுவேன் என மிரட்டுகிறார்.

ஆகவே அவர் மீதும் அவருக்கு துணையாக இருந்து என்னை மிரட்டும் அவரது தந்தை உதயகுமார், பவானி உதயகுமார், பிரவீன் குமார் ஆகியோர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…”

காவல்துறையின் நடவடிக்கை என்ன என்று பொறுத்திருந்து பார்ப்போம்.