May 1, 2024
  • May 1, 2024
Breaking News
November 24, 2020

சென்னை மாநகராட்சியின் 24×7 கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள…

By 0 988 Views

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 x 7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை உள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டு அறை 75 பணியாளர்களுடன் பொதுப்பணித்துறை, போக்குவரத்துக் காவல்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் மற்றும் பிற துறைகளின் அலுவலர்களுடன் இயங்கி வருகிறது.

இந்தக் கட்டுப்பாட்டு அறையின் 044-25384530, 044-25384540 என்ற தொலைபேசி எண்களும், 1913 புகார் மையத்தின் எண்ணும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.

நிவர் புயல் கனமழை சேத விளைவுகளுக்கு சென்னை மக்கள் இந்த எண்களில் உதவி பெற முடியும்.