April 19, 2024
  • April 19, 2024
Breaking News
  • Home
  • Edappadi palanisamy

Tag Archives

தமிழகத்தில் தளர்வுகளுடன் அக் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு – முதல்வர்

by on September 29, 2020 0

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும். திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கடற்கரைகளுக்கு தொடர்ந்து தடை நீட்டிப்பு. புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்கான தடை தொடரும். திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது. கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும். அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு. திரைப்பட படப்பிடிப்புகளில் 100 பேர் வரை பங்கேற்க அனுமதி. உள்துறை அமைச்சகம் அனுமதித்த […]

Read More

எஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு

by on September 25, 2020 0

இந்திய மொழிகள் பலவற்றிலும் 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்தது மட்டுமில்லாமல் ஆறு தேசிய விருதுகள் உள்ளிட்ட பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் அமரர் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம். இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மறைந்த அந்த சாதனையாளருக்கு இந்தியா முழுமையில் இருந்தும் அஞ்சலிகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் அவரது உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் அரசுக்கு  கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதன் எதிரொலியாக தாமரை பக்கத்திலுள்ள […]

Read More

கொரோனா பரிசோதனைக்கு தமிழகம் முழுவதும் 2000 கிளினிக் – முதல்வர் அறிவிப்பு

by on September 8, 2020 0

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஆலோசனை முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதிலிருந்து… கொரோனா படிப்படியாக குறைந்து வருவதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.  தமிழகத்தின்் பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. கொரோனா […]

Read More

இ பாஸ் இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்று அறிய முடியும் – முதல்வர்

by on August 27, 2020 0

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது… தமிழகத்தில் அதிகளவு கொரோனா பரிசோதனைகள் செய்வதன் காரணமாக தொற்று கட்டுக்குள் உள்ளது. உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் கொரோனாவுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம். கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்திற்கும் அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றதுடன் கொரோனா தடுப்புக்காக 39 நடமாடும் மருத்துவக்குழுக்கள் செயல்படுகின்றன. முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் கடலூரில் 9 ,965 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில்தான் அதிகளவு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன..! […]

Read More

தமிழ்நாட்டுக்குள் செல்ல விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் – முதல்வர் உத்தரவு

by on August 14, 2020 0

முக்கியப் பணிகளுக்காக, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். தவிர்க்க இயலாத பயணங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்குமாறும் தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. […]

Read More

அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் அடுத்த வாரம் தொடக்கம்

by on August 9, 2020 0

கொரோனாவால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மருத்துவ கண்காணிப்புக்காக ‘அம்மா கோவிட் ஹோம் கேர்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அடுத்த வாரம் செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார். இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது ; அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டத்தில், வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்கான சிறப்பு பெட்டகம் ரூ.2,500-க்கு வழங்கப்படும். அந்தப் பெட்டகத்தில், உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் […]

Read More

ஜூலை 31க்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிப்பா – 30ஆம் தேதி முதல்வர் ஆலோசனை

by on July 28, 2020 0

கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் எந்தவித தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுகிறது. ஆனாலும  கூட தமிழக மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் (ஜூலை 30) முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நாளை மாவட்ட கலெக்டர்களுடன் […]

Read More

முழு ஊரடங்கு நீட்டிக்கப் படுமா – முதல்வர் பதில்

by on June 20, 2020 0

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்கான மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.  வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களாலேயே தமிழகத்தில் கொரோனா பரவியது. மருத்துவர்கள், செவிலியர்களின் சிறப்பான பணியினால் குணமடைவோர் விகிதம் அதிகமாக உள்ளது. தினமும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் தான் இதுவரை 8 லட்சத்து 27 […]

Read More

எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனி குடும்பத்திற்கு 20 லட்சம் ஒருவருக்கு வேலை – முதல்வர் அறிவிப்பு

by on June 16, 2020 0

லடாக் எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இந்தியா-சீன படைகள் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.   இதில், இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.   அதில் ஒருவர் ராமநாதபுரம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்ற வீரர். பழனியின் வீர மரணத்திற்கு ஏற்கனவே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.   தெலங்கானா ஆளுநர தமிழிசை, மக்கள் நீதி மய்யம் தலைவர் […]

Read More

மீண்டும் ஊரடங்கு கடுமை ஆக்கப்படுமா? – முதல்வர் விளக்கம்

by on June 12, 2020 0

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் முதலமைச்சர் பேசிய போது வெகுவகமாக நோய்த் தொற்று பரவி வருமவதால் மீண்டும் சென்னையில் ஊரடங்கு கடுமை ஆக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்தினார். “சென்னையில்  மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை . கட்டுப்பாடுகளை […]

Read More