நடிகை தன்ஷிகாவுக்கு இன்று பிறந்தநாள். சமீபத்தில் படத்துக்காக சிலம்பாட்டம் பயின்றிருக்கிறார் தன்ஷ். எனவே இன்று தனது பிறந்த நாளை தனது சிலம்பாட்டம் குருவான பாண்டியன் மாஸ்டர் அவர்களின் இடத்தில் கொண்டாட முடிவு செய்து அங்கே சென்றார். தனது பிறந்தநாளின் முதல் நிகழ்வாக தனது குருவிற்கு வணக்கம் செலுத்தியவர் அங்கு குழுமியிருந்த பல்வேறு மாவட்ட ரசிகர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடன இயக்குனர் ஸ்ரீதர் கலந்து கொண்டு தனது வாழ்த்துகளைத்தெரிவித்தார். ரசிகர்களின் அன்பிற்கிணங்க […]
Read Moreவிஜய் சேதுபதி வித்தியாச வேடமேற்று டிசம்பர் 20 அன்று உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக, இதுவரை அறியப்படாத ஒரு நடிகர் நடிக்கிறார். அவர் ஒரு பிரபல நடிகரின் அண்ணனும் கூட. ஆம், நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில், இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். “உண்மையில், இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகரை கண்டுபிடிப்பது மிகப்பெரிய ஒரு சவாலாக இருந்தது. இது கதாபாத்திரத்தின் இயல்பு அதற்கு முக்கிய […]
Read Moreகஜா தன் கொடுங்கரங்களால் கலைத்துப் போட்ட தமிழகப் பகுதிகளைச் சீரமைக்க பல துறையினரும் உதவிகள் செய்து வருவதைப் போலவே திரைத்துறையிலிருந்தும் பலர் முன்வந்து உதவிகளைச் செய்து வருகிறார்கள். இதில் கடந்த வாரம் ஜோதிகா நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘காற்றின் மொழி’ தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு நூதன திட்டத்தைத் தன் உதவியாக மட்டுமல்லாமல், ரசிகர்களும் சேர்ந்து உதவும் முகமாக அறிவித்திருக்கிறார். அந்த உதவி அவர்கள் மொழியில் கீழே… “காற்றின் மொழி’ திரைப்படத்தை ஒரு சிறந்த குடும்பப்படமாக […]
Read Moreநேற்று நயன்தாரா தன் பிறந்தநாளைக் காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினார். யார் யார் அவருக்கு என்னென்ன பரிசுகள் கொடுத்தார்களோ தெரியாது. ஆனால், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவருக்கு அளித்த பரிசுதான் உன்னதமானது. ஏற்கனவே அவர் உருவாக்கிய வந்தே மாதரம் ஆல்பம் போல் இப்போது இந்தியாவையும், இந்திய தேசிய விளையாட்டான ஹாக்கியையும் உயர்த்தும் பொருட்டு, ‘ஜெய்ஹிந்த் இந்தியா…’ எனும் வீடியோ ஆல்பத்துக்கு இசையமைத்திருக்கிறார். அதன் ப்ரொமோ வீடியோவை நேற்று நயன்ஸின் பிறந்தநாளில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். இந்தியாவெங்கும் பரபரப்பாக வைரலாகிவரும் இந்த […]
Read Moreசென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 2000 ஆயிரம் கிலோ நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது தெரிந்திருக்கலாம். இது பற்றிய பகீர் விவரம்… ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வரும் ஜோத்பூர் விரைவு ரயிலில் முறையாகப் பதப்படுத்தப்படாத ஆட்டிறைச்சி அனுப்பப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது அதனையடுத்து இரண்டு தினங்கள் முன்பு காலை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த ஜோத்பூர் விரைவு ரயிலில் உணவுப் பதுகாப்பு அதிகாரிகளும் சென்னை மாநகராட்சி […]
Read More