சென்னை மணலி, பல்ஜிபாளையம், சின்னசேக்காட்டைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 25). சின்னத்திரை ஜூனியர் ஆர்டிஸ்டான இவர் பிரபல சீரியல் ஒன்றில் நடிச்சு வருகிறார். வானத்தை போல, அதற்கு முன்பு செம்பருத்தி தொடரில் உமா ரோலில் நடித்து பிரபலமானவர். அவர் இன்று காலையில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருந்தது… ‘‘நான் என் கணவர் சரவணனை கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பிரிந்து விட்டேன். இந்நிலையில் நான் நடிக்கும் சீரியலில் […]
Read Moreதமிழில் இளம் தலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். கட்டான தோற்றமும் நல்ல நடிப்பு திறமையும் கொண்ட இவர் நடிப்பில் ராட்சசன் மிகப்பெரிய வெற்றியடைந்தது. கடைசியாக இவர் நடித்து வெளியான படம் ‘ காடன்’. முன்பே திருமணமான விஷ்ணுவிஷால் கருத்து வேற்றுமை காரணமாக முதல் மனைவியை பிரிந்து தனித்து வசித்து வந்தார். இந்நிலையில் பிரபல பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் அவருக்கு காதல் அரும்பியது. சமீபத்தில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது விரைவில் ஜுவாலா கட்டாவை மணமுடிப்பேன் என்று […]
Read Moreஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லிஃப்ட்’. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க, அவருக்கு ஜோடியாக, நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார். இவர்களுடன் கிரண், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, பிரிட்டோ மைக்கேல் இசை அமைத்திருக்கிறார். ஜி மதன் படத்தைத் தொகுக்க சண்டைக் காட்சிகளை ஸ்டன்னர் சாம் கவனிக்க, சதீஷ் கிருஷ்ணன் நடனம் அமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் […]
Read Moreகொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை கடும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்தியா வெகுவிரைவில் முதலிடம் பிடித்து விடும் என கணிக்கிறார்கள் நிபுணர்கள். மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை. ஆக்ஸிஜன் இல்லை. ரெம்டேஸீவர் மருந்து இல்லை. தடுப்பூசிகள் இல்லை. ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம். பெரிய பெரிய தலைவர்கள் முதல் கடைக்கோடி மனிதர்கள் வரை நாளுக்கு நாள் தொற்று காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இந்த இரண்டாவது அலையில் குழந்தைகளும் பெருமளவில் […]
Read Moreதனது திரைப்படங்கள் மூலமாக சமூக விழிப்புணர்வு கருத்துக்களை கூறி, ‘சின்ன கலைவாணர்’ என அனைவராலும் ஒருமனதாக பாராட்டப்பட்ட, பத்மஸ்ரீ நடிகர் விவேக், கடந்த சில தினங்களுக்கு முன் காலமானார். அதேபோல, நிஜ வாழ்க்கையில் இயற்கையை பாதுகாக்கும் முயற்சியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட விவேக், மரம் நடுதலின் அவசியத்தை அனைவரிடமும் வலியுறுத்தி வந்தார். மேலும் தனது வாழ்நாளில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்பதை தனது லட்சிய கனவாக கொண்டு செயல்பட்டு வந்த அவர், 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டு […]
Read Moreதமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் நேற்று அளித்த பேட்டியில், “தமிழக அரசு தற்போது இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் 112 தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டன. மீதி உள்ள தியேட்டர்களில் 200 தியேட்டர்கள் மூடப்படும் நிலையில் இருக்கிறது. எனவே மீண்டும், மீண்டும் ஊரடங்கு போடுவதால் எங்களால் தியேட்டர்களை நடத்த முடியாது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து தியேட்டர்களையும் மூட முடிவு செய்துள்ளோம். நாளை செவ்வாய்க்கிழமை […]
Read Moreகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். அதற்கு முதல்நாள் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாஜகவின் பாரத பிரதமர் மக்கள் நலத் திட்டங்கள் பிரச்சார விளம்பர அமைப்பின் செயலாளர் ராஜசேகரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். அதில், ‘கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் நடிகர் விவேக்குக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும், யாரும் […]
Read More