குறுக்கு வழியில் முன்னேறுபவர்களால் நேர்வழியில் நியாயமாக முன்னேறுபவர்களின் வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதைக் குறுக்கு புத்திக் காரர்களின் மனசாட்சியைப் பிடித்து உலுக்கி எடுத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. அத்துடன் கல்விதான் எல்லா முன்னேற்றங்களுக்கும் அடிப்படை என்பதையும் சொல்லியிருக்கிறார். கேட்பதற்கு பழமைவாதம் போலத் தோன்றினாலும் அதை இன்றைய இளைஞர்களுக்குப் பிடித்த நவீனங்களுடன் சொல்லி இருப்பதால் அதிரி புதிரியாகி இருக்கிறது படம். லவ் டுடே படத்தில் இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்த பிரதீப் ரங்கநாதன்தான் ஹீரோ என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. […]
Read Moreசமுத்திரக்கனிக்கு மகன் பிறப்பதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. ‘ மகனை சான்றோன் ஆககுதல் தந்தையின் கடனே…’ என்கிற வார்த்தைக்கேற்ப மகனை அருமையாகவும் பாசத்துடனும் வளர்க்கிறார். ஆனால் அப்படி வளர்த்த மகன் உருப்படாமல் வளர்ந்து நின்றால் ஒரு தந்தைக்கு எப்படி இருக்கும்..? தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை செய்வதெல்லாம் தவறான வேலை என்று இருக்கையில் அந்தத் தந்தைக்கும் மகனுக்குமான உறவு எப்படி சென்று முடிந்தது என்பதுதான் படத்தின் கதை. தமிழ் சினிமாவில் நல்ல தந்தை என்றாலும், நேர்மையானவர் என்றாலும் […]
Read Moreஇது வழக்கமான காதல் கதைதான் என்று ஆரம்பத்திலேயே நமக்குத் தெளிவுபடுத்தி விடுவதிலேயே இயக்குனர் தனுஷின் கெத்து தெரிகிறது சமையல் கலையைக் கல்வியாகப் பயிலும் நடுத்தர வர்கத்து நாயகன் பவிஷ் நாராயண், கோடிஸ்வர பெண்ணான அனுகா சுரேந்திரனை அது தெரியாமலேயே காதலிக்கிறார். அனிகாவின் தந்தையான சரத்குமாரை சந்திக்கும் வரை நன்றாக போய்க் கொண்டிருந்த அவர்களது காதல் ஒரு முடிவுக்கு வருகிறது. ஒன்பது மாதங்கள் கழிந்த பிரேக் அப் பிரிவில் அனிகா தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட, பவிஷுக்கு வீட்டில் […]
Read Moreஇயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! 7G Films நிறுவனம் சார்பில் 7G சிவா தயாரிப்பில், ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் “சப்தம்”. காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக, ஒலியை மையமாக வைத்து, இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. வரும் 2025 பிப்ரவரி 28 ஆம் தேதி ஆம் தேதி உலகமெங்கும் […]
Read More*பாரதிராஜா – நட்டி நட்ராஜ் – ரியோ ராஜ் – சாண்டி மாஸ்டர் – ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘நிறம் மாறும் உலகில்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு* சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக […]
Read Moreசென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார் இப்படத்தின் கதை சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப் பட்டுள்ளது. இப்படத்தின் கதை, திரைக்கதையை ‘மெட்ரோ’ , ‘கோடியில் […]
Read Moreஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’ ஆகும். இப்படத்தை GRR மூவிஸ் சார்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார். ஓர் (அ)சாதாரண தந்தையைப் பற்றிய படமிது. ஃபிப்ரவரி 21 அன்று வெளியாகும் இப்படத்தின் முன்வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், ‘சாட்டை’ பட இயக்குநர் அன்பழகன், ‘சங்கத்தலைவன்’ பட இயக்குநர் மணிமாறன், ‘வெள்ளை யானை’ இயக்குநர் சுப்ரமணிய சிவா, ‘சித்திரைச் செவ்வானம்’ இயக்குநர் ஸ்டன்ட் […]
Read More