July 13, 2026
  • July 13, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தமிழ் சினிமாவில் யாரும் சொல்ல துணியாத கதை நாற்கரப்போர்

தமிழ் சினிமாவில் யாரும் சொல்ல துணியாத கதை நாற்கரப்போர்

By on June 28, 2022 0 591 Views

நடிகர் லிங்கேஷ் மெட்ராஸ் படம் மூலம் அறிமுகமானவர் , தொடர்ந்து பரியேறும்பெருமாள், குண்டு, கபாலி , படங்களின் கவனம் பெற்றவர் .

இதனை தொடர்ந்து தற்பொழுது கதாநாயகனாக காயல், காலேஜ் ரோடு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தடுத்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது இப்படங்கள் .

தற்பொழுது ஹெச் வினோத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீவெற்றி இயக்கும் ‘நாற்கரப்போர்’ எனும் படத்தில் அபர்நதி கதையின் நாயகியாக நடிக்க , கதையின் நாயகனாக லிங்கேஷ் நடித்துவருகிறார்.

நாற்கரப்போர் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும், தமிழ் சினிமா எப்போதும் நல்ல கதைகளை கைவிட்டதில்லை. 

தரமான இயக்குனர்களை தமிழ் சினிமா உருவாக்கிக்கொண்டேதான் இருக்கும் அந்த வரிசையில் ஶ்ரீ வெற்றி இணைவார் என எதிர் பார்க்கலாம் 

நாற்கரப்போர் படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றுவருகிறது ஶ்ரீ வெற்றி இயக்கத்தில் ஒளிப்பதிவாளர் திருவின் உதவியாளர் அர்ஜுன் ரவி ஒளிப்பதிவில் 

முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றிருக்கிறது.

இந்தப்படம் தனக்கு மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் லிங்கேஷ்.