கமல் அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு
காவிரிப் படுகையில் துணை ராணுவப் படையை திரும்பப் பெற வேண்டும் – சீமான்
காவிரி டெல்டா பகுதியில் குவிக்கப்பட்டுள்ள துணை ராணுவத்தை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து…
“தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோகார்பன் எடுப்பு, மீத்தேன் எடுப்பு,ஷெல் எரிவாயு எடுப்பு போன்ற பேராபத்துமிக்க திட்டங்களைப் புகுத்தி காவிரிப் படுகை மாவட்டங்களை பாலைவனமாக்க சதித்திட்டம் தீட்டி மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
தற்போது காவிரிப் படுகை நிலப்பகுதிகளில் சி.ஆர்.பி.எப். எனப்படும் துணை ராணுவப்படையினரை…
Read Moreதமிழக ஆளுநரை இன்று மாலை சந்திக்கும் முதல்வர்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தத் தவறிய மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசு கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்ச நீதி மன்றம், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதற்கு இன்னும் மூன்று நாட்களே…
Read Moreபிரதமர் ஒரே நாளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் – நாராயணசாமி
தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் நேற்று கூறிய தீர்ப்பு பற்றியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகவும் சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்த கருத்துகளிலிருந்து…
“இங்கு சபாநாயகர் அதிகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது. ஆனால் புதுவை மாநிலத்தைப் பொறுத்தவரை சபாநாயகர் உத்தரவில் கோர்ட்டு தலையிட முடியும் என்று கூறியுள்ளது. ஒரே பிரச்சினையில் இரண்டு விதமான தீர்ப்பு வந்திருப்பதற்கு மக்கள் மன்றம்தான் பதில்…
Read Moreதிமுக ஆட்சி அமைந்ததும் குட்கா குற்றவாளிகளை தண்டிப்போம் – ஸ்டாலின்
தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் விற்பனையில் பணம் பெற்றுக்கொண்டு அவற்றை அனுமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதன் காரணமாக முதலமைச்சர், அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதிலிருந்து…
“கொடுமையான புற்றுநோய் வருவதற்கு குட்கா தொடர்பான போதைப்பொருட்களே காரணம். ஆனால், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதும், இப்போது நடைபெறும் அ.தி. மு.க. ஆட்சியிலும் தடைச்செய்யப்பட்ட…
Read Moreஎஸ்.வி.சேகர் பதிவு மன்னிக்க முடியாத குற்றம்-ரஜினி
உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக பெறுவதற்காக ரஜினிகாந்த் இன்றிரவு அமெரிக்கா செல்கிறார். முன்னதாக அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் சமீபத்தில் ட்விட்டரில் வெளியிட்ட கருத்து பற்றிய கேள்விக்கு, “ஐபிஎல் போராட்டத்தின்போது சீருடையில் இருக்கும் போலீஸ் காரர்களை தாக்கியது தவறு. காவலர்களும் சட்டம் கையில் இருக்கிறதென்று வரம்பு மீறக்கூடாது..!” என்றார்.
அவர் கட்சி தொடங்குவது குறித்து கேட்கப்பட்டபோது, “நான் கட்சி தொடங்குவது உறுதி. ஆனால், நான் இன்னும் உறுதியாகவில்லை..!” என்றார்.
பேராசிரியர் நிர்மலா தேவி மற்றும் எஸ்.வி.சேகரின் பெண் பத்திரிகையாளர்…
Read Moreநியூட்ரினோ – முதல்வருக்கு வைகோ எச்சரிக்கை
மதுரையில் ‘நியூட்ரினோ’ திட்டத்துக்கு எதிரான நடைப்பயணம் வைகோ தலைமையில் நேற்று துவங்கியது.
அந்தப் பயணத்தை தி.மு.க., செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார். அப்போது வைகோ பேசியதிலிருந்து-
“நியூட்ரினோ’ திட்டத்துக்காக தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில் 11 லட்சத்து 25 ஆயிரம் டன் கடும் பாறையை தகர்த்து காந்தக்கல் வைக்க 1,000 டன் ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தவுள்ளன. இது நிறைவேறினால் முல்லைப் பெரியாறு மற்றும் இடுக்கி அணை உடையும். தமிழகம் பாலைவனமாகும்.
இத்திட்டம் நிறைவேற மக்கள் கருத்து தேவையில்லை என மத்திய அரசு…
Read Moreகருணாநிதியை சந்திக்க மம்தா சென்னை வருகிறார்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இரண்டுநாள் பயணமாக ஏப்ரல் 10 மற்றும் 11 தேதிகளில் சென்னை வர இருக்கிறார்..
அப்போது அவர், திமுக தலைவர் கருணாநிதியையும், செயல் தலைவர் ஸ்டாலினையும் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே மத்தியில் பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சிக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அந்த அணியில் இடம்பெறவும் தி.மு.க-வுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் மம்தா சென்னை வர இருப்பதும், தி.மு.க. தலைவர்களைச் சந்திக்க இருப்பதும்…
Read Moreமுதல்ல செக்கப்… அப்புறம் பிக்கப்… ரஜினி திட்டம்..!
அரசியல் களமிறங்கும் ரஜினி இங்கே தனது மக்கள் மன்றத்துக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புகளை முடுக்கிவிட்டு தன் உள்ளத்தைத் தூய்மை செய்து கொள்வதற்காக இமயமலை சென்றிருக்கிறார்.
இந்தப் பயணத்தின் குறுக்கே அரசியல் பேசுவதில்லை என்று அவர் உறுதி கொண்டிருந்தாலும் அவரை யாரும் விடுவதாயில்லை.
இந்த ஆன்மிகப் பயணம் முடிந்தபின் அவர் முழு உடல் தகுதி பரிசோதனைகளுக்காக சிங்கப்பூர் செல்வதாக இருக்கிறார் என்கிறது தகவல் வட்டாரம். ஏற்கனவே அவர் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துமனைக்குச் செல்ல இருக்கிறாராம்.
உள்ளமும்,…
Read More