சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் நடிப்பில் இயக்குனர் தாமிராவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவான ‘ஆண் தேவதை’ படத்தின் இசை வெளியீடு இன்று 10ஆம் தேதி நடப்பதாக இருந்தது. போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழின தலைவர் கலைஞர் இயற்கை எய்த இந்த நேரத்தில் நிகழ்ச்சி வேண்டாம் என்று படக் குழுவினர் ஒருமித்தமாக கூடி முடிவு செய்தனர்.
இது குறித்து ‘ஆண் தேவதை’ திரைப்படத்தின் திரை அரங்கு விநியோக உரிமை பெற்ற நியூ ஆர். எஸ். எம். பிலிம் புரடக்ஷன்ஸ்…
Read More
வாழ்ந்து கெட்ட ஒரு பரம்பரையின் வாரிசான அப்பாவி கிராமத்துப் பெரிய மனிதரான ‘தம்பி ராமையா’ தன் மகன் ‘உமாபதி ராமையா’வையும் அவ்வாறே பொறுப்பில்லாமல் வளர்க்கிறார். அதனால், உமாபதியின் முறைப்பெண்ணைக் கட்டிவைப்பதில் கூட சிக்கல் வருகிறது.
அங்கே சுதாரித்து அந்த முறைப்பெண்ணான மிருதுளா முரளியின் ஆலோசனைப்படியே ஒரு பங்குத் தொழில் தொடங்க நினைத்து மக்களிடம் பணம் வசூலிக்க, அதை கால்டாக்ஸி டிரைவரான ‘மொட்ட ராஜேந்திரன்’ ஆட்டையைப் போட, நல்ல மனிதர் பெயரெடுத்த ராமையாவின் குடும்பத்தினர் கெட்ட பெயரெடுத்து அல்லல்…
Read More
‘தமிழ்நாட்டில் எல்லோரும் வாழலாம். ஆனால், தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும்…’ என்ற ஆரோக்கியமான சிந்தனையுடன் களம் இறங்கியிருக்கிறார் இயக்குநர் யுரேகா. ஆனால், அதைச் சரியாகச் சொல்லியிருக்கிறாரா என்பதுதான் ஆகப்பெரிய கேள்வி.
தன் போக்கில் போகக்கூடிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ‘காளி’தான் ஹீரோ. அதன் காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் அவரிடம் நகரைக் கலக்கும் ‘சைக்கோ’ ஒருவனைப் பிடிக்கும் பொறுப்பை போலீஸ் கமிஷனர் ஒப்படைக்கிறார். இவரே கோக்குமாக்கான ஆளாக இருக்க, அந்தப் பொறுப்பை அவர் நிறைவேற்றினாரா என்கிற கதை.
காட்டாற்று வெள்ளமான…
Read More
இப்போது தயாரிப்பிலிருக்கும் புதிய படம் ‘பொறுக்கிஸ்’. இப்படி ஒரு தலைப்பா என்று பதறிவிடாதீர்கள். அந்த தலைப்புக்குக் கீழே ’அல்ல நாங்கள்’ என்ற சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளதாம். ‘கேஎன்ஆர் மூவிஸ்’ சார்பில் ராஜா தயாரித்துள்ள படம் இது.
‘பிசாசு’, ‘சவரக்கத்தி’ படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மஞ்சுநாத்.எஸ் ‘பொறுக்கிஸ்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் மாறியுள்ளார். ஒளிப்பதிவும் இவரே.
படத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். கதையின் மையத் தூணாக ராதாரவி நடிக்க, ரவிவர்மா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசைவெளியீட்டு…
Read More
சென்னைக்குப் பிழைப்பு தேடி வந்த மதுரைக்கார ஹீரோவுக்கும், அவரது நண்பருக்கும் அதிர்ஷ்டவசமாக ஒரு பெரும்பணம் கிடைக்க, அவர்கள் படும்பாடு என்ன, மற்றவர்களைப் படுத்தும் பாடு என்பதும் கதை.
எந்த நோக்கத்துக்காக சென்னை வந்தார் என்றே சொல்லப்படாத ஹீரோவாக ஹீரோ மிதுன் மகேஸ்வரன். வழியில் பார்த்த ஒரு நபரையே நண்பராக்கிக் கொண்டு அவர் செய்யும் அலப்பறைகள் போதாதென்று ஒரு அழகான பெண்ணும் அவர் கண்ணில் சிக்கி காதலில் விழ… மனிதருக்கு மச்சம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
பார்வைக்கு ஐடி துறையைச்…
Read More