May 3, 2024
  • May 3, 2024
Breaking News

Currently browsing செய்திகள்

கமல் வெளியிட்ட விக்ரம் 56 படத்தின் முதல் பார்வை

by by Nov 6, 2018 0

நடிகர்களில் கமலைப் போன்ற அழகும், திறமையும் ஒருங்கே பெற்றவர் விக்ரம். கமலைப் போன்றே தன் கேரக்டர்களுக்காக உடலை இளைத்தும், பெருக்கியும் நடிப்பதிலும் கமலுக்கு அடுத்தபடியாக விக்ரம் பெயர்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும்.

இவர்கள் இருவரும் இணைந்தால் ஒரு அற்புதப்படம் கிடைக்கும் என்பது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் எண்ணமாக இருக்க, அப்படி ஒரு படமாக அமைகிறது ‘கடாரம் கொண்டான்’.

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப்படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்க, அக்ஷரா ஹாசன் அவருக்கு ஜோடியாகிறார்.

விக்ரமின் 56வது படமாக…

Read More

பல உயிர்களை பலி வாங்கிய புளூ வேல் படமாகிறது

by by Nov 5, 2018 0

இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்று சம்பாதித்தால் தான் குடும்பம் நடத்த முடியும். மேலும், தங்கள் குழந்தைகள் ஆடம்பரமாகவும், அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் இருவருமே சம்பாதிக்கின்றனர்.

அதைவிட, விலைமதிக்க முடியாத அன்பு, கவனிப்பு, பாசம் மற்றும் நேரத்தை அவர்களுடன் செலவழிக்காதது பிள்ளைகளை தவறான பாதையில் கொண்டு சேர்க்கும் என்ற விபரீதத்தை அறியாதிருக்கிறார்கள்.

இதன் விளைவாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளு வேல்’ (Blue Whale)…

Read More

சுந்தர் சியின் பேய் பிரியமும், துரையின் பேய் பயமும்

by by Nov 4, 2018 0

இயக்குநர் வி.இசட். துரை இப்போது சுந்தர்.சிக்காக ‘இருட்டு’ என்ற படத்தை இயக்குகிறார். இதுவும் ஒரு ‘ஹாரர்’ படம்தான். அடச்சே இன்னொரு பேய்ப்படமா என்று அலுத்துக் கொள்ளமல் அதற்கு அவர் கூறும் காரணங்களைக் கேளுங்கள்.

‘இருட்டு’, ஏற்கனவே வெளியான பேய் படம், திகில், த்ரில்லர் போன்றில்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

அதாவது கற்பனையாக நமது நிஜ வாழ்வில் ஒரு பேயோ, பிசாசோ இருந்தால் எப்படி இருக்கும் என்பது பற்றி வந்திருக்கும். அல்லது யாரோ ஒருவரால் கொல்லப்பட்டு, இன்னொருவரின் உடம்பில் புகுந்து…

Read More

சூர்யா அஜித் மாதவனுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக, இருந்தது – ஜோதிகா

by by Nov 3, 2018 0

‘காற்றின் மொழி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஜோதிகா பேசும்போது

“ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத் தான் இருக்கும். ஆனால் அந்த படத்தை பார்த்ததே கிடையாது. கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். ஆனால் இப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது.

‘மொழி’ படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராதாமோகனுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதே நேர்மறையான உணர்வு. அந்தப் படத்தில் நடித்த முதல் காட்சி போலவே இந்த படத்திலும்…

Read More

இறங்கியாச்சு இன்வெஸ்ட் பண்ணியாச்சு வந்தா ஷ்யூரா அடிக்கவேண்டியதுதான் – ரஜினி

by by Nov 3, 2018 0

இந்தியாவின் பிரமாண்டப் படமாகக் கூறப்படும் 2.ஓ படத்தின் டிரைலர் இன்று வெளியிடப் பட்டது.

இந்தப் படம் 3டியில் உருவாக்கப்பட்டிருந்தாலும் உலகிலேயே முதல்முறையாக 4டி எஸ் எல் ஆர் என்ற புதிய ஒலி நுட்பத்தில் உருவாக்கப் பட்டிருக்கிறது. இதுபற்றி ஷங்கர் கூறும்போது….

“3டி ஒலிநுட்பம் இடம் வலம் மேலே ஒலி கேட்கும் அளவில் இருக்கும். 4டி என்பது கால்களுக்கு கீழும் ஒலி கேட்கும். இதைத் தமிழ் படத்தில் கொண்டு வர வேண்டும் என்ற கனவு இருந்தது. அது இதில் நிறைவேறியது.

இந்த…

Read More

ஷாலினி பாண்டே ஜோடி சேர அக்னி சிறகுகள் விரிக்கும் விஜய் ஆண்டனி

by by Nov 2, 2018 0

‘மூடர் கூடம்’ படம் மூலம் வெள்ளித்திரையில் வித்தியாச இடத்தைப் பிடித்த இயக்குநர் நவீன் இயக்கத்தில் ‘விஜய் ஆண்டனி’யின் அடுத்த படம் அமைகிறது. அர்ஜுன் ரெட்டி திரைப் படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் இடையே மிகப் பிரபலமான ஷாலினி பாண்டே இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.தமிழ் திரை உலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தை தக்க வைத்து இருக்கும் நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் 23ஆவது திரைப் படம் இது. 

இவர்களுடன் மிக…

Read More

சர்கார் எதிரொலி – எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் ராஜினாமா

by by Nov 2, 2018 0

சர்கார் கதை ஏற்படுத்திய பரபரப்பில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர சங்கத் தலைவராக இருந்த கே.பாக்யராஜ் எடுத்த அதிரடி முடிவுகள் அவர் மீதான நன்மதிப்பை உயர்த்தின. கதைக்கு சொந்தம் கொண்டாடிய வருண் ராஜேந்திரன் நீதி மன்றத்தை அணுகி சாதகமான சமரசத்துக்கு வர, பாக்யராஜின் உறுதிதான் மூலகாரணமாக இருந்தது.

இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர சங்கத் தலைவர் பதவியை இன்று திடீரென்று ராஜினாமா செய்தார் கே.பாக்யராஜ். நான் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் படாமல் நேரடியாக தலைவர் பதவிக்கு வந்தவன். நேரடியாக…

Read More

ஏ.ஆர்.முருகதாஸ் காஞ்சி காமாட்சி கோவிலுக்குச் சென்றது ஏன்..?

by by Nov 2, 2018 0

ஏ.ஆர்.முருகதாஸும் இன்றைக்கு செய்திகளை உருவாக்குபவர் ஆகிவிட்டார். அவர் நின்றாலும் செய்தி… நடந்தாலும் செய்தி என்று ஆகிவிட்ட நிலையில் நேற்று அவர் காஞ்சி காமாட்சி கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு வந்தார்.

அதன் காரணமாகக் கூறப்படுவது ‘சர்கார்’ படத்தின் வெற்றிக்காக என்றுதான். ஆனால், ‘சர்கார்’ கதைப் பிரச்சினை சாதகமாக அமைய வேண்டிக் கொண்டதன் அடிப்படையிலும் அவர் கோவிலுக்கு வந்ததாக ஒரு வட்டாரம் செய்தி சொல்கிறது.

A.R.Murugadoss in Kamatchi Temple

Read More

சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் தியேட்டர் உரிமம் ரத்து

by by Nov 1, 2018 0

ஒவ்வொரு பெரிய நடிகரின் படம் ரிலீசாகும்போதும் ரசிகர்களின் ஆர்வத்தை மூலதனமாக்கி தியேட்டர்காரர்கள் டிக்கெட்டின் விலையைக் கணிசமாக உயர்த்தி அநியாய லாபம் பார்த்துவிடுகிறார்கள்.

ரசிகர்களும் என்ன விலை கொடுத்தாவது தங்கள் ஆதர்ச ஹீரோவின் படத்தை முதல்நாளே முதல் ஷோவே பார்த்துவிடத் துடிக்கிறார்கள்.

இப்போது தீபாவளி ரிலீசாக விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ வெளியாகும் நிலையில், மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்துசெய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க…

Read More

96 கதை விவகாரம் – பிரேம்குமாரின் விளக்கத்தை ஏற்பாரா பாரதிராஜா..?

by by Nov 1, 2018 0

இது காப்பியடித்த கதைகளுக்கு காப்புரிமை கோரும் சீசன். ‘சர்கார்’ கதை சமரசத்துக்கு வந்த நேரத்தில் ’96’ படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார். பாரதிராஜாவும் அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார்.

இதில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குநர்…

Read More