தர்பார் சசிகலா தொடர்பான வசனம் நீக்காவிட்டால் வழக்கு
நித்யானந்தா ஆசிரமம் இடித்துத் தள்ளப்பட்டது
அகமதாபாதில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தை ஜேசிபி இயந்திரங்களுடன் வந்த மாநகராட்சி அதிகாரிகள் முற்றிலுமாக இடித்து தள்ளினர். இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆசிரமத்தில் குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாகவும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அளிக்கப்பட்ட புகாரையடுத்து நித்தியானந்தாவை கைது செய்ய குஜராத் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையறிந்த நித்தியானந்தா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார்.
அவருடைய ஆசிரமம் பள்ளி வளாகத்தில் சட்டவிரோதமான நில ஆக்ரமிப்பில் கட்டப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
விரைவில் ஜியோ மார்ட் ஆன்லைன் சூப்பர் ஸ்டோர்ஸ்
விரைவில் துவங்குகிறது “ஜியோ மார்ட்” நேரடி விற்பனை மற்றும் ஆன்லைன் சூப்பர் ஸ்டோர்ஸ்!*
வால்மார்ட், அமேசான், பிக் பேஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் அனைத்து வகையான வீட்டு உபயோகப் பொருள்கள் கிடைக்கும் வகையிலான சூப்பர் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்களை துவக்க உள்ளது.
“நாட்டின் புதிய கடை’ என்ற அடைமொழியுடன் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள ஜியோ மார்ட், தற்போதைய நிலையில் மகாராஷ்டிராவின் நவி மும்பை, தானே மற்றும் கல்யான்…
Read More
கடும் குளிர் காரணமாக டெல்லியில் ரெட் அலர்ட்
டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுவதால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் வடக்குப் பகுதியில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலை புத்தாண்டு வரை தொடரும் எனவும் கூறியுள்ளது.
கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக விமான ஓடு பாதையில் 50 மீட்டர் முதல் 175 மீட்டர் வரை மட்டும் வெளிச்சம்…
Read More
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் காலமானார்
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன்(90) நேற்று காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி மோகன் உயிர் பிரிந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் மோகன்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக 1991-ல் மோகன் பதவி உயர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
Read More
லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் காலமானார் சென்னையில் திருவையாறு ரத்து
லக்ஷ்மன் ஸ்ருதியின் நிர்வாக இயக்குனரும், திரு. வி. வேணு (லேட்) அவர்களின் புதல்வரும், திரு. லக்ஷ்மண் அவர்களின் சகோதரருமான திரு. வே. ராமன்(54), இன்று (24.12.2019) இரவு 08.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
அவருக்கு நிர்மலா ராமன் என்ற மனைவியும், மனோஜ் குமார் என்ற மகனும், தாயார் திருமதி. வி. வடிவம்மாள், திரு லக்ஷ்மண், திரு முருகவேல் ஆகிய இரு சகோதரர்களும், திருமதி. புனிதா என்ற சகோதரியும்…
Read More
நேருக்கு நேர் மோதிய ரயில்கள் விபத்து வீடியோ
நேற்று காலை ஹைதராபாத்திலுள்ள கச்சேகுடா ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் டிரைவர் உள்பட 11 பேர் காயமடைந்தனர் அல்லவா..?
அந்த விபத்து ஏற்பட்டபோது அருகிலிருந்த சிசிடிவி மூலம் அந்த விபத்து எப்படி நடந்தது என்று தெரிய வந்துள்ளது.
இரண்டு ரயில் டிரைவர்களுமே ஒன்றை ஒன்று பார்த்து வேகத்தைக் குறைத்துள்ளனர். அதில் அதிவேக ரயில் கிட்டத்தட்ட நிற்கும் நிலைக்கு வந்துவிட, மெட்ரோ ரயில் மட்டும் வேகத்தைக் கட்டுப்படுத்தியும் நிற்காமல் மித வேகத்தில் சென்று மோதியது.
இதில்…
Read More
அறிவித்தபடி விஜய்சேதுபதி அலுவலகம் முற்றுகை
‘மாண்டி’ என்ற ஆன்லைன் வணிகத்தை ஊக்குவிக்கும் முகமாக அதன் விளம்பரத்தில் இடம்பெற்ற நடிகர் விஜய்சேதுபதியைக் கண்டித்து பல அறிக்கைகள் வந்தன.
அதில் அடுத்தகட்டமாக வணிக போராளி கொளத்தூர் த.ரவி தலைமையில் அவரது அலுலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள்.
அதன்படி இன்று (05-11-2019) காலை அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது.
ஆனால், இதுவரை இது குறித்து விஜய் சேதுபதியோ, அவர் விளம்பரம் செய்த மாண்டி நிறுவனமோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதாவது ‘மக்கள் செல்வன்’ மௌனம்…
Read More
விஜய் சேதுபதி 41 வயதை ஒட்டி 41000 பனை விதை நடவு
விஜய் சேதுபதி அலுவலகம் முற்றுகையிட அழைப்பு
இன்றைக்கு சினிமாத்துறையில் பலருக்கும் உதவிகள் செய்து நல்ல பெயரெடுத்த முன்னணி நடிகர் என்றால் அவர் விஜய் சேதுபதிதான். அவருக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டமும் இருக்கிறது.
தான் செய்யும் செயல் பிறருக்குப் பிடிக்கவில்லை என்றால் அதனைத் தூக்கி எறிந்து விடுவார். அப்படித்தான் தமிழர் விரோதப் போக்குள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் அவர் நடிக்கக் கூடாது என்று பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்ததால் அப்படி ஆரம்பிக்கப்பட்ட படத்திலிருந்து அவர் விலகினார்.
ஆனால், சமீபத்தில் அவர் செய்த…
Read More