வாழ்ந்தவர்கள் சரித்திரம் படமானாலே அதற்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், வாழும் உதாரண சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படத்துக்கு அவர் பெயரையே தலைப்பில் வைத்து கிரீன் சிக்னல் நிறுவனம் ‘டிராஃபிக் ராமசாமி’ என்று தயாரித்திருப்பதால் அதற்கான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.
அரங்க மேடையில் நீதிமன்ற செட் போடப்பட்டு விருந்தினர்கள் பேசுமிடம்…
Read More
கௌதம் மேனனை நல்ல இயக்குநராகத் தெரியும். ஆனால், அவரை நடிகராக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் தனது கோலிசோடா2 பத்தின் மூலம் என்பது தெரிந்திருக்கும்.
‘ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கோலி சோடா 2.வில் சமுத்திரகனியுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் கௌதம் மேனன்., இவர்களுடன் பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்ஷா, கிரிஷா குரூப் நடித்துள்ள இந்த படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார். வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும்…
Read More
31 வருடங்களுக்கு முன் கமல் நடித்து வெளியான ‘நாயகன்’ படத்தை நினைவுபடுத்தும் படம். அதில் எப்படி மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த வேலு நாயக்கர் அந்தப் பகுதி மக்களுக்கான வாழ்விடத்தைத் தக்கவைக்கவும், அந்தப் பகுதி மக்களின் வாழ்வுரிமைகளுக்காகவும் போராடி மாண்டாரோ அதே தேவைகளுக்காக இதில் தாராவியிலிருக்கும் அடித்தட்டு மக்களின் அறிவிக்கப்படாத தலைவராக இருக்கும் திருநெல்வேலித் தமிழரான ‘காலா’ என்கிற கரிகாலன் போராடி மாளும் கதை.
தாராவி குடியிருப்பை காலி செய்து கட்டடம் கட்ட ஆதிக்க சக்தி படைத்த…
Read More
‘சிம்பு’ என்றாலே ‘வம்பு’ என்பதுதான் சினிமாவைப் பொறுத்தவரை. ஆனாலும் அவருக்கான ரொட்டி சினிமாவிலிருந்து வெதுப்பி வைத்ததாகவே தோன்றுகிறது. ஷூட்டிங்குக்கு வர மறுக்கிறார், படத்தை முடித்துக் கொடுக்க மறுக்கிறார் என்று ஆயிரம் புகார்கள் எழுந்தாலும் அவரது படங்கள் வரிசைக் கட்டிக்கொண்டுதான் இருக்கின்றன.
இப்போது மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ புக்கானாலும் ஆனது, அவரது அடுத்த சீசன் அற்புதமாக லைன் கட்டி நிற்கிறது.
‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் டப்பிங்க் வேலைகள் மட்டுமே மிச்சமிருக்க, அதை முடிக்கும் சிம்பு அடுத்து தான்…
Read More
தலைப்பைப் பார்த்துவிட்டு கிளுகிளுப்பான படம் என்று வரும் சபலிஸ்டுகள் நிச்சயம் ஏமாற மாட்டார்கள். ஆனால், அவர்களை உள்ளுக்கிழுத்து திருத்துவது… அல்லது அந்த செய்கை தவறு என்று உணரவைப்பதுதான் படத்தின் ‘நல்ல’ நோக்கம்.
அந்த வகையில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சஜோ சுந்தரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
அடுத்தவரின் அந்தரங்கத்தைப் பார்க்கும் ஆவல்தான் சபலப்படுபவர்களை இப்படித் தவறு செய்ய வைக்கின்றது. தாழ்ப்பாள் ஓட்டைக்குள் எட்டிப் பார்க்கும் நிலையிலிருந்து முன்னேறி (!) இன்றைய டிஜிட்டல் உலகம் அடுத்தவர் அந்தரங்கத்தை அவர்கள்…
Read More