திரையிசை உலகில் தனி சாம்ராஜ்யம் நடத்தி இன்று வரை தனக்கான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் டி.எம் சவுந்தர்ராஜன். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே 1944-ல் இவரது சகோதரரான டிஎம் கிருஷ்ணமூர்த்தி உடன் கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார்.
டிஎம்எஸ்சை விட நான்கு வயது இளையவரான டி.எம் கிருஷ்ண மூர்த்தி மிருதங்க வித்துவானாக ஜொலித்தவர். குறிப்பாக டிஎம்எஸ்.,க்கு இசை ரீதியாக உதவிகள் செய்தவர் அவர்.
அவரது இசை சேவையை பாராட்டி கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது…
Read More
சீயான் விக்ரம் தனது ஒவ்வொரு படத்தின் அறிவிப்பையும் எதிர்பார்ப்புகுரிய படமாகவே அமைத்து, அறிவித்து வருகிறார்.
தற்போது பெரும் பொருட்செலவில் உருவாகும் ‘கோப்ரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடித்து தொடங்கவுள்ளது.
ஒவ்வொரு படத்திலுமே தனது நடிப்பால் அசரடித்து வரும் சீயான் விக்ரம் தனது 60-வது படத்தை இன்னும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைத்திருக்கிறார்.
இதில் முதன் முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார். ‘ஆதித்ய வர்மா’…
Read More
நடிகை மேக்னா ராஜின் கணவரும், நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா திடீரென்று மரணமடைந்து விட்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பல்வேறு படங்களில் நாயகியாக நடித்தாவர் மேக்னா ராஜ். தமிழில் ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘உயர்திரு 420’, ‘நந்தா நந்திதா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அதிகமான படங்களில் நடித்து இருக்கிறார்.
நீண்ட நாட்களாக…
உஷா ராஜேந்தர் மற்றும் டி ராஜேந்தர் இருவரும் தங்கள் மகன் சிலம்பரசனின் திருமணம் குறித்து ஒரு அறிக்கையை மீடியாக்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள் அதன் பிரதி கீழே….
அனைவருக்கும் வணக்கம்.
எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.
எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள்…
Read More
பொது ஊரடங்கு வந்தாலும் வந்தது எதை பிரச்சனைக்கு உள்ளாகலாம் என்று அலைபவர்களுக்கு தோதான நேரம் கிடைத்திருக்கிறது.
யாரோ எப்போதோ பேசிய பேச்சுக்களை எல்லாம் தோண்டி எடுத்து அதன் மீதான விமர்சனங்களையும் தாக்குதல்களையும் தொடர்வது இப்போது வாடிக்கையாகி வருகிறது.
அதிலும் சிலர் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள் அதில் சூர்யாவின் குடும்பம் ஒன்று.
ஒரு படத்தில் விழாவில் ஜோதிகா தஞ்சாவூர் கோவில் பற்றி பேசிய பேச்சை தூசு தட்டி எடுத்து பெரிதுபடுத்தி பிரச்சனைக்கு உள்ளாக்கினார்கள். விஷயம் தெரிந்தோர் அப்படி செய்வது தவறு…
Read More
பொது முடக்க காலத்தில் கோலிவுட் நம்மை மகிழ்விக்கும் ஏராளமான, ஆச்சர்யங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கி வெளியான “கார்த்திக் டயல் செய்த எண்” குறும்படம் வெளியான வேகத்தில் இணைய உலகை கலங்கடித்து, யூடுயூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கில் பார்வைகளை குவித்து, பெரும் வெற்றியடைந்தது. தனித்தன்மை…
சென்னை கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 5-வது பிளாக் 115-வது தெருவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் உதவி கமிஷனர் கோ.அரிக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
அப்போது அந்த வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்ற போலீஸார், வீட்டுக்குள் ஆண், பெண் என 2 சடலங்களை அழுகிய நிலையில் மீட்டனர்.
இதுகுறித்துகொடுங்கையூர் போலீஸார் கூறுகையில், “தகவல் கிடைத்ததும்…
Read More
ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தொடர்ந்து ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’படமும் நேரடியாக OTT -க்கு விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் தற்போது இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய கங்கனா, ” ஆம், தலைவி படம் Netflix மற்றும்
Amazon என்ற இரண்டு முக்கிய OTT தளங்களுக்கு விற்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான்.
ஆனால் அதே நேரத்தில் இப்படம் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக OTTயில் வெளியாகாது. தியேட்டர்களுக்காகத்தான் இந்த…
Read More