February 1, 2026
  • February 1, 2026
Breaking News

Currently browsing அரசியல்

100-ல் நான்கைந்து பேர்தான் 8 வழிச்சாலைக்கு நிலம் தர மறுக்கின்றனர் – முதல்வர்

by by Jun 24, 2018 0

சென்னையிலிருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலையாக எட்டுவழிச்சாலை அமைக்க அரசால் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு எதிராக விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எதிர்ப்புகளைக் காட்டி வருகின்றனர்.

ஆனாலும், நிலம் கையகப்படுத்தும் பணிகளும், கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கற்கள் நடும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், சேலம் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதிலிருந்து…

“சென்னை – சேலம் விரைவு…

Read More

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் – கமல்

by by Jun 22, 2018 0

தனது கட்சியான ‘மக்கள் நீதி மய்யம்’ பதிவு தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லி சென்ற கமல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், நேற்று காலையில் சோனியா காந்தியை சந்தித்ததும் எதிர்பாராத நிகழ்வுகளாக அமைந்தன.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துச் செயல்பட கமல் திட்டமிட்டிருப்பதாக அரசியல் நோக்கர்களால் மேற்படி சந்திப்புகள் கருதப்பட, டெல்லியில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பிய கமல், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதிலிருந்து…

“ராகுல் காந்தி, சோனியா இருவரையும் மரியாதை நிமித்தமாகவே…

Read More

இன்று ராகுல் காந்தியை சந்தித்த கமல் நாளை சோனியாவைச் சந்திக்கிறார்

by by Jun 20, 2018 0

அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று ஒரு காலத்தில் சொல்லிக் கொண்டிருந்த கமல், பிப்ரவரி மாதம் 21-ம் தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.

‘மக்கள் நீதி மய்யம்’ என்று அறிவித்த கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். தேர்தல் ஆணையமும் கமல்ஹாசனின் புதுக்கட்சி குறித்து ஆட்சேபம் ஏதும் இருந்தால் தெரிவிக்க அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், எந்த ஆட்சேபமும் வரவில்லை.

இந்நிலையில் அவரை இன்று தேர்தல் ஆணையம்…

Read More

காவிரி பற்றி கமலுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியாது – தேவே கவுடா

by by Jun 19, 2018 0

ஓசூர் அருகே உள்ள கனிமங்கலம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் தேவே கவுடா, நிருபர்களுக்கு பேட்டியளித்ததில் இருந்து…

“கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் நீதிமன்றம் குறிப்பிட்டதை விட, அதிக அளவில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

காவிரி விவகாரத்தில், நடிகர் கமல்ஹாசன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகச் சொன்னாலும், இது இரு மாநில விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருப்பதால் அனைத்து தரப்பும் பேசி விவாதித்துதான் முடிவெடுக்க…

Read More

மத்திய அமைச்சரைத் தொடர்ந்து மாநில அமைச்சர் இல்ல நிகழ்வில் எஸ்.வி.சேகர்

by by Jun 18, 2018 0

பெண் பத்திரிகயாளர்களைப் பற்றி அவதூறாகப் பதிவிட்டதற்காக ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கண்டனத்துக்கு ஆளான எஸ்.வி.சேகரைப் பற்றிப் போலீஸில் புகார் செய்யப்பட்டதை அடுத்து கைது நடவடிக்கைக்கு பயந்து அவர் சில நாள்கள் பெங்களூருவில் தலைமறைவாக இருந்தார்.

அதன்பின் சென்னைக்கு வந்தவர் பல இடங்களில் தலைகாட்டி வருகிறார். இருந்தும் அவரைப் போலீஸ் இன்னும் கைது செய்யாமலிருப்பதற்கு பல தரப்புகளில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

சில வாரங்களுக்கு முன் எஸ்.வி.சேகர், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்ட ஒரு…

Read More

மிக விரைவில் திமுக ஆட்சி உதயமாகும் – முக ஸ்டாலின்

by by Jun 17, 2018 0

நேற்று சென்னை அண்ணாநகர் எம்.ஜி.ஆர்.காலனியில் நடந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி யின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கல்ந்துகொண்ட தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து…

“கருணாநிதி பிறந்தநாள் விழாவை தி.மு.க. சார்பில் தமிழ்நாட்டில் மட்டும் நாம் கொண்டாடவில்லை. தமிழகத்தைத தாண்டி இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களில்… கடல் கடந்து எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கு எல்லாம் கொண்டாடப்படுகிறது.

அதற்குக் காரணம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு மட்டும் இல்லாமல், உலகம் எங்கும்…

Read More

காவிரி நீரைப் பகிர்வதில் இந்த வருடம் சிக்கல் இருக்காது – குமாரசாமி

by by Jun 15, 2018 0

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இன்று மதுரைக்கு வந்த கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதிலிருந்து…

இப்போது கர்நாடகாவில் பருவமழை பெய்து வருவதால் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது

பருவ மழை தொடர்ந்தால் நடுவர் மன்ற உத்தரவின்படி மாதா மாதம் திறக்க வேண்டிய தண்ணீரைத் திறந்து விடுவதில் சிக்கல் இருக்காது.

கர்நாடகாவில் மழை பெய்து வருவதை அடுத்து, கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக…

Read More

பிரதமர் மோடியின் ஃபிட்னஸ் சவால் வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு

by by Jun 13, 2018 0

இன்றைய ‘ஹாட் டாப்பிக்’கே பிரதமர் மோடி வெளியிட்ட ‘ஃபிட்னஸ் சவால்’ வீடியோதான். அனைத்து சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்திவரும் இதன் பின்னணி தெரிந்திருக்கலாம்.

“அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாம் உடல் உறுதியுடன் இருந்தால்தான் நாடும் உறுதியுடன் இருக்கும்…” என்று வலியுறுத்தி மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை கடந்த மாதம் வெளியிட்டார்.

ட்விட்டரில் அதை வெளியிட்டது மட்டுமல்லாமல் அதில் விராத் கோலி, ஹ்ரித்திக் ரோஷன், சாய்னா நேவால்…

Read More

பெட் ரோல் விலையை ஏழு ரூபாய் வரை குறைக்க முடியும் – ப.சிதம்பரம்

by by Jun 11, 2018 0

இன்று டெல்லியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதிலிருந்து…

கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கு வேளையிலும் பெட்ரோல், டீசல் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. ஜிஎஸ்டி வரம்புக்குள் எரிபொருளைக் கொண்டு வந்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் விலை குறையும்.

இதன் மூலம் எரிபொருள் விலையை லிட்டருக்கு ஏழு ரூபாய் வரை குறைக்க முடியும். பெட்ரோல், டீசலின் விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய…

Read More

திருப்பதி கோவிலை கையகப்படுத்த மத்திய அரசு திட்டம் – சந்திரபாபு நாயுடு

by by Jun 8, 2018 0

மத்தியில் ஆளும் பா.ஜ. அரசு திருப்பதி கோவிலைக் கையகப்படுத்தத் திட்டம் வகுப்பதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சித்தூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.

“கோவிலைத் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசு தீவிர முயற்சி செய்கிறது. அந்தத் திட்டம் நிறைவேறாது. திருப்பதி கோவிலுக்கு எதிரான சதித் திட்டத்தை வெற்றியடையை நாங்கள் விடமாட்டோம்.

திருப்பதி பாலாஜியின் அருளால்தான் 2003-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரமான தாக்குதலில் உயிர் பிழைத்தேன். கோவிலின் புனிதத்தை சிதைக்க எக்காரனம்…

Read More