பூரண உடல்நலம் பெற்று மீண்டும் வருவேன் – விஜயகாந்த்
ஓபிஎஸ் ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்
தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ஒட்டி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்ததை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியது. அதன்படி மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த எட்டு துணை ராணுவப் படை வீரர்கள் ஓ.பி.எஸ்ஸுக்கு பாதுகாப்பு கொடுத்து வந்தனர்.
தமிழகத்தில் மேலும் இரண்டு முக்கிய வி.ஐ.பி-க்களுக்கு இசட் பிரிவு எனப்படும் சி.ஆர்.பி.எஃப்…
Read More
அடுத்த வாரம் பொங்கல் பரிசு ரூ 1000 கிடைக்கும்
தமிழ்நாட்டில் ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் பொது மக்களுக்கு வினியோகிக்கப்படும். அதுபோல் இந்த ஆண்டு வழங்கும் நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் ஒரு மாதத்துக்கு முன்பே பொங்கல் தொகுப்பு பரிசு திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
அது முதல் தமிழ் நாடு முழுவதும் 2 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு தேவையான பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்க ரேஷன் கடைகளுக்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய்…
Read More
தமிழகத்தில் பிரதமர் மோடியின் ரத யாத்திரை..!
ஆளும் மத்திய அரசின் சமூக நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை கிராமப்புற மக்களுக்கும் தெரிவிக்க தமிழகம் முழுதும் ரதயாத்திரை நடை பெற உள்ளது.
2020 ஜனவரியில் நடைபெறும் இந்த ரதயாத்திரையில் பிரதமர் மோடி பங்கு பெறுகிறார்.
பிரதான் மந்திரி ஜன்கல்யான்காரி யோஜனா பிரசார் அபியான் சார்பில் நாடு முழுதும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல், பெண்களுக்கு சுய தொழில் செய்ய வங்கி கடனுதவி, சிறு தொழிலுக்கான முத்ரா கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலதிட்டங்களை மக்களிடம்…
Read More
20 நாள்களில் வெங்காய விலை குறையும் – முதல்வர்
தமிழகம் முழுக்க வெங்காயத்தில் விலை நாளுக்கு நாள் விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் வெங்காயம் வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
கோவை விமான நிலையத்தில் நேற்றிரவு (டிச.8) செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து கேட்கப்பட்டபோது, “தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் வெங்காயத்தின் விலை உயர்ந்திருக்கிறது.
மழைக்காலம் என்பதால், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வெங்காயம் வரவேண்டிய சூழல் இருக்கிறது. வெங்காயம் வரத்து குறைந்ததால், அதன் விலை உயர்ந்தது.
தமிழகத்தில் வெங்காயம் விளைச்சல் நன்றாக இருக்கிறது. எனவே…
Read More
வாரிசு உள்ளவர்கள்தான் வாரிசுதாரர் ஆக முடியும் – முக ஸ்டாலின்
புதுக்கோட்டை, விராச்சிலையில் இன்று நடைபெற்ற தி.மு.க. நிர்வாகியின் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து…
1967-ல் அண்ணா தலைமையில் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பு ஏற்றபோது முதன் முதலாக அண்ணா சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதுதான் சீர் திருத்த திருமணத்திற்கு சட்டப்படியான அங்கீகாரமாக அமைந்தது. அந்த சட்ட முறைப்படி இந்த திருமணம் இங்கு நடந்தேறியிருக்கிறது.
சுயமரியாதையை காப்பதற்காக தந்தை பெரியார் பாடுபட்டார், உழைத்தார். பல தியாகங்கள் செய்தார். கல்லடியும், சொல்லடியும்…
Read More
20 மற்றும் 25 லட்சம் ஏலம் போன மோடி புகைப்படங்கள்
தனக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பரிசுப்பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் நிதியை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு செலவிட பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்தார்.
மத்திய கலாசார அமைச்சகம் அந்த பரிசுப் பொருட்களின் கண்காட்சி மற்றும் ஏல விற்பனையை டெல்லியில் நடத்தியது. அவை டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 2,772 பரிசுகள் ஆன்லைன் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
செப்டம்பர் மாதம் 14-ந் தேதி தொடங்கிய இந்த ஏலம்…
Read More
அசுரன் படம் கிளப்பிய அரசியல் பிரச்சினை
அசுரன் படம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்ததால் வெளியாகி இரண்டாவது வாரம் தாண்டியும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இடையில் படத்தில் வரும் ஒரு வசனத்தை நீக்க முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதை அடுத்து அந்த வசனம் நீக்கப்பட, அதைத் தவிர படம் எந்த ஒரு அரசியல் பிரச்சினையையும் கிளப்பாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று தூத்துக்குடியில் அசுரன் படத்தைத் தியேட்டரில் சென்று பார்த்தார் திமுக தலைவர் முக ஸ்டாலின். படம் அவருக்கு மிகவும் பிடித்துப்போக, தன் மகிழ்ச்சியை ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
பொதுத் துறை ஊழியர்களுக்கு தமிழக அரசின் போனஸ் அறிவிப்பு
தமிழக அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்…
மாநில அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன் படி போனஸ் பெற உச்சவரம்பு ரூ. 21 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் குரூப் சி-டி ஊழியர்களுக்கு 2018-2019-ம் ஆண்டுக்கான போனஸ் 8.33 மற்றும் ஊக்கத்தொகை 1.67 சதவீதம் என மொத்தம் 10…
Read More
தெலங்கானா கவர்னராக தமிழிசை – டிசம்பரில் தமிழக பாஜக புதிய தலைவர்
தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்ட நிலையில் தமிழக பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று மதுரை விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்தபோது கூறியதிலிருந்து…
“பா.ஜனதா கட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக மாநில தலைவராக சிறப்பாக பணியாற்றிய தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மராட்டியம் உள்பட நான்கு மாநிலங்களுக்கும் கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக பா.ஜனதாவுக்கு புதிய தலைவரை நியமிக்கும்…
Read More