August 15, 2026
  • August 15, 2026

வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கிய மகளிர் ஆளுமை விருதுகள் 2018

by on September 26, 2018 0

வேல்ஸ் பல்கலைக்கழகம் Panache Events & Branding நிறுவனத்துடன் இணைந்து வழங்கிய ‘மகளிர் ஆளுமை விருதுகள் 2018’ பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவாலயா அரங்கில் நேற்று காலை நடைபெற்றது.   விழாவில் ஜார்க்கண்ட் மாநில ஆளுனர் ‘திரௌபதி முர்மு’ அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 12 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பு பேருரை ஆற்றினார்.   விழாவில் சிறப்பு விருந்தினர்களையும், விருது பெறும் மகளிரையும் வரவேற்று பேசிய […]

Read More

கிம்பல் என்ற புதிய ஒளிப்பதிவு நுட்பத்தில் உருவான பரியேறும் பெருமாள்

by on September 25, 2018 0

பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர் ,கயல் ஆனந்தி ,யோகிபாபு, லிஜிஸ் நடிக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’ .செப்டம்பர் 28 படம் வெளியாகும் இந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பையும் ‘கிம்பல்’ என்ற தொழில் நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள். இந்த தொழில்நுட்பம் மற்றும் படத்தைப் பற்றி படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகிறார்… “பரியேறும் பெருமாள் என்னுடைய இரண்டாவது படம் , முதல் படம் மாலை நேரத்து மயக்கம் . நான் பிறந்து வளர்ந்தது சென்னைதான் எனக்கு அதிகமாக கிராமத்து வாழ்க்கைபற்றி […]

Read More

ஆன்ட்ரியா எழுதி பாடி நடித்த வீடியோ பாடலைப் பாருங்கள்

by on September 25, 2018 0

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆன்ட்ரியாவுக்கு நல்ல இசைத்திறமை இருப்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். அவர் அவ்வப்போது யுவன் சங்கர் ராஜா ,ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் பாடல்களைக் கொடுத்து வருகிறார். இப்போது தன் ‘தி ஜெர்மையா புராஜக்ட் எங்கிற தன் இசை கம்பெனிக்காக ‘ஹானஸ்ட்லி’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார். இதன் சிறப்பு இதில் இடம்பெற்ற பாடலுக்கு ஆண்ட்ரியாவே பாடல் வரிகளை எழுதியும்,பாடியும் நடித்துள்ளார். இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மற்றும் […]

Read More

2000 திரைகளில் பிரமாண்டமாக வெளிவரவுள்ள சண்டக்கோழி2 – விஷால்

by on September 24, 2018 0

ஆச்சு… விஷாலும் தன் பட் எண்ணிக்கையில் வெள்ளிவிழாக் கொண்டாடிவிட்டார். அவரே நடித்து தயாரித்துள்ள சண்டக்கோழி 2 அவரது 25வது படமாக அமைகிறது. சண்டக்கோழி2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால், கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண், ஒளிப்பதிவாளர் சக்தி, எடிட்டர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். அந்நிகழ்வில் விஷால் மனம் விட்டுப் பேசியதிலிருந்து… “25படங்களில் என்னோடு பணியாற்றிய அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். சண்டக்கோழி பாகம் ஒன்று எனக்காக எழுதப்பட்ட கதை அல்ல.அது […]

Read More

கார்த்தி படப்பிடிப்பில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 140 பேர் நிலை என்ன

by on September 24, 2018 0

கார்த்தியின் ‘தேவ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெறுவதாக இருந்தது. கன மழை , பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ‘தேவ்’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் 140 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகிறார்கள். படப்பிடிப்பு நின்று போனதால் படத்தை தயாரிப்பு நிறுவனத்துக்கு 1 1/2 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி நடிகர் கார்த்தி கூறும் போது , “தேவ்’ படத்தின் படப்பிடிப்பை குலு மணாலியில் அழகிய மழை மற்றும் […]

Read More

இந்திய கிரிக்கெட்டில் தோனி நிகழ்த்திய புதிய சாதனை

by on September 24, 2018 0

ஐக்கிய அரபு அமீரகத்தில் 14வது ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், நேற்று (23 செப்டம்பர் 2018) நடந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்ட நிலையில் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் தன் 505வது ஆட்டத்தை விளையாடியதன் மூலம் இந்தியாவிற்காக டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளையும் சேர்த்து அதிக அளவிலான போட்டிகளில் […]

Read More

ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு அடுத்த மாத ஆலோசனைக் கூட்டத்தில்..?

by on September 24, 2018 0

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவிப்பை வெளியிட்டதையடுத்து ரஜினி ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றம் செய்யப்பட்டன. அதன் பிறகு மாவட்டம் தோறும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். ஜூலை மாதம் மாவட்டந்தோறும் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கையும், உடனுக்குடன் அடியாள அட்டை […]

Read More

சென்னை அசைவப் பிரியர்களுக்கு மதுரை கறி விருந்து

by on September 23, 2018 0

ராஜா மற்றும் பிரசன்னா என்ற இரு இளம் தொழில் முனைவோர்கள் சாப்ட்வேர் மற்றும் வணிகம் என்று வெவ்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், சேர்ந்து ஒரு நல்ல உணவகம் ஆரம்பிக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன் இணைந்திருக்கிறார்கள். மதுரைக்கே உரித்தான மண்ணின் கமழும் சுவையை அதன் தரம் குறையாமல் சென்னை மக்களுக்கு தரும் பொருட்டு, ‘மதுரை ராஜாம்மாள் கறிக்குழம்பு’ எனும் பெயரில் சென்னை நீலாங்கரையில் உணவகம் ஆரம்பித்திருக்கிறார்கள். அஜினமோட்டோ, ஐயோடின் உப்பு, பாக்கெட் மசாலாக்கள் மற்றும் ஊசிபோட்டு வளர்க்கப்பட்ட பிராய்லர் கோழிகள் […]

Read More
CLOSE
CLOSE