மனிதர்கள் இறக்கிறார்கள் ஆனால் மனிதம் மரிப்பதில்லை என்பதுதான் படத்தின் அடிநாதம். அதைச் சொல்வதற்கு தமிழ்ப்படவுலகில் சசிகுமாரை விட்டாலும் ஆளில்லை.
தலைப்பைப் பார்த்து இது ஏதோ நீதி மன்றம் சம்பந்தப்பட்ட கதை என்று நினைத்துவிட வேண்டாம். அதிகார மமதையில் சட்டத்தை வளைக்க நினைப்பவர்களுக்கு ஒரு சாமானியன் தீர்ப்பு எழுத வாய்ப்புக் கிடைத்தல் அந்தத் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதுதான் கதை.