April 26, 2024
  • April 26, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சூர்யா கூட நடிக்கும்போது நிறைய சண்டை வரும் – ஜோதிகா கலகல
December 18, 2019

சூர்யா கூட நடிக்கும்போது நிறைய சண்டை வரும் – ஜோதிகா கலகல

By 0 859 Views

முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடிக்கும் படம் ‘தம்பி’. ஜோதிகாவின் தம்பி தயாரித்திருக்கும் படம், இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் படம் என எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது ‘தம்பி’.

ஜோதிகா, கார்த்தி, நிகிலா விமல், இயக்குநர் ஜீத்து ஜோசப் ஆகிய நால்வரையும் படம் பற்றி பேச ஒன்றாக சந்தித்த உரையராடல் இது…

“சூர்யா, கார்த்தி இருவரும் சேர்ந்து நடிப்பாங்கனு எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருக்காங்க ஆனா இவங்க ரெண்டு பேரையும் சேர்ந்து நடிக்க வச்சது ஏன் ?”

ஜீத்து ஜோசப் : இவங்க ரெண்டு பேரையும் நான் செலக்ட் பண்ணல, எங்கிட்ட வந்தப்போ இவங்க ரெண்டு பேரும் பிக்ஸ் ஆகிருந்தாங்க, இந்த காம்பினேஷன் எனக்கு பிடிச்சிருந்தது அதுக்கு அப்புறமா மற்ற நடிகர்கள தான் நான் செலக்ட் பண்ணினேன்.

“இந்தக்கதை எப்படி எழுதினீங்க ?”

ஜீத்து ஜோசப் : இந்தக்கதை என்னோடதல்ல, பாலிவுட் ரைட்டர் ரென்ஷில் டி சில்வா, சமீர் அரோரா ரெண்டு பேரும் எழுதியிருக்காங்க அவங்க கதையை நான் கொஞ்சம் மாத்தி வேலை பார்த்திருக்கேன். அவங்க ஹிந்தி, நான் மலையாளம். அதனால தமிழ்ல சரியா இருக்கனும்கிறதுக்காக விக்ரம் வேதா ரைட்டர் மணிகண்டன் இதில வேலை பார்த்திருக்கார். இந்தபடத்தின் திரைக்கதையில 4,5 பேர் வேலை பார்த்திருக்கோம்.

“கதை பற்றி..?”

ஜீத்து ஜோசப்: இது ஒரு ஃபேமிலி திரில்லர். ரெண்டு ஃபேமிலி அவங்களுக்குள்ள நடக்கிற சம்பவங்கள், அதில் ஒரு
திரில்லர் இருக்கும். இதுக்கு மேல இப்ப எதுவும் சொல்ல முடியாது.

இதுல வேற வேற லுக்ல வர்றீங்களே எத்தனை கேரக்டர் உங்களுக்கு ?

கார்த்தி : மல்டிபிள் லுக் கிடையாது . ரெண்டு லுக் தான். கதை கோவாவுல ஆரம்பிச்சு பயணிக்குது.அதனால ரெண்டு லுக். நான் நிறைய கெட்டப் முயற்சி பண்ணினதில்லை. சார் தைரியம் சொல்லி கோவா லுக் பண்ண வச்சார் உங்கள சும்மாவே பாக்குறாங்க வேற லுக்லயும் பாப்பாங்கனு கன்வின்ஸ் பண்ணாரு. கோவா பகுதிக்கு மட்டும் அதை முயற்சி பண்ணிருக்கோம் அப்புறம் நார்மலா ஆயிடுவேன்..!”

“கார்த்தி… இதுல ரெண்டு விதமான பாத்திரம் பண்ணிருக்கீங்களா..? அதில் உள்ள மாற்றங்கள் என்னென்ன ?”

கார்த்தி : ரெண்டு கேரக்டர் கிடையாது. ஒரு கேரக்டர்தான். டபுள் ஆக்‌ஷன் கிடையாது ஒரே கேரக்டர் எப்படி டிராவல் ஆகுதுங்கிறது மட்டும்தான். அது எப்படி மாறுது என்கிறதுதான் சுவாரஸ்யம்..!”

ஜீத்து ஜோசப் : இரண்டுக்கும் நிறைய வேறுபாடு இருக்கு. கார்த்தி ரெண்டு விதமா பண்ணிருக்கார். நல்லாவே நடிச்சிருக்கார். நீங்க பாருங்களேன்… தெரியும்.

“ஜோ.. உங்க தம்பி தயாரிக்கிற படம் இந்த தம்பி கூட நடிக்கிறீங்க எப்படி இருந்தது ?”

ஜோதிகா: எதிர் பார்க்கவே இல்ல, எப்படி நடந்ததுனு இப்பவும் ஆச்சர்யமா இருக்கு. அதுவும் ‘தம்பி’ன்னு டைட்டில் அமைஞ்சது எல்லாமே ரொம்ப சந்தோஷமா இருக்கு.

“கார்த்தி கூட நடிக்கிறது கஷ்டமா ?  இல்ல சூர்யா கூட நடிக்கிறது கஷ்டமா ?”

ஜோதிகா : சூர்யா கூட தான். அவர் கூட நடிக்கிறது கஷ்டம்.. நிறைய சண்டை வரும்… உங்க வீட்ல எப்படி சண்டை வருமோ.. அப்படித்தான் புருஷன் பொண்டாட்டி சண்டை..!

Thambi Team Meet

Thambi Team Meet

“தமிழ் சினிமால நிறைய அக்கா தம்பி வந்துருக்காங்க இதிலென்ன ஸ்பெஷல் ?”

ஜீத்து ஜோசப்: அத நீங்க தியேட்டர்லதான் பார்க்கனும். இதுல எல்லா கேரகடருக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஒரு நோக்கம் இருக்கும் .

கார்த்தி : இல்ல கண்டிப்பா ஒரு ஸ்பெஷல் இருக்கு.. ஆனா அத நீங்க தியேட்டர்லதான் பார்க்கணும்..!

ஜோதிகா : இதுல நிறைய ஒரிஜினாலிடி இருக்கும்..!

“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கும் போது எது கஷ்டமா இருந்தது ?”

கார்த்தி : கஷ்டமெல்லாம் தோணவே இல்ல. நாங்க எப்பவும் எப்படி இருப்போமோ அப்படிதான் இருந்தது. நான் என்ன ரசிச்சேன்னா படத்துல எங்க ரெண்டு பேருக்கும் ஒத்து வராது. சண்டை போட்டுகிட்டே இருப்போம் அவங்க முறைப்பாங்க… நான் ஒதுங்கி போவேன் அத ரசிச்சேன்.

“வீட்லயும் அப்படித்தானா..?”

கார்த்தி : வீட்ல நாங்க ரெண்டு பேரும் நிறைய பேசிப்போம்..!

ஜோதிகா : இல்ல… வீட்ல நாங்க சண்டைலாம் போட்டுக்க மாட்டோம்..!

“நிகிலா… இவங்க ரெண்டு பேர் நடிக்கிற படம் எப்படி ஒத்துக்கிட்டீங்க ?”

நிகிலா விமல்: இந்த டீமே ரொம்ப பெரிசு, பெரிய பெரிய டெக்னீஷியன்கள், இவங்க ரெண்டு பேரும் நடிக்கிறாங்க இப்படி ஒரு படத்த யார் வேணாம்னு சொல்வாங்க, ஆனா எனக்கு முதல்ல பயம் இருந்தது. தமிழில் எனக்கு ரீஎன்ட்ரி மாதிரி நம்ம கேரக்டருக்கு ஒன்னுமே இருக்காதோனு நினைச்சேன் ஆனா கேரக்டரும் நல்லா இருந்தது அதான் ஒத்துக்கிட்டேன்..!

“ஜோதிகா பொம்பள கமல்’னு சொல்லுவாங்க இதுல எப்படி நடிச்சிருக்கீங்க ?”

ஜோதிகா : அப்படில்லாம் ஒண்ணும்  கிடையாது அப்படி யாரும் சொல்ல மாட்டாங்க. என்ன பொறுத்த வரைக்கும் லேடி கமல்னா ஒரே ஆள் ஊர்வசி மேடம் மட்டுந்தான்..!”

ஜீத்து ஜோசப் : ஒண்ணு சொல்லனும்  இவங்க நடிப்பு பிரமாதம். ஒரு கேரக்டருக்கு இவங்க எடுத்துக்குற உழைப்பு, சிரத்தை, ஒரு ஸீனுக்கு முன்னாடி அவங்க தன்ன தயார்படுத்திக்கிறது எல்லாமே பக்கா ஃபுரபஷனல்..!

ஜோதிகா : நன்றி சார்..!

“தம்பினு ஏற்கனவே ஒரு படம் வந்துருக்கு… அப்புறம் ஏன் மீண்டும் அதே டைட்டில் ?”

ஜீத்து ஜோசப் : நிறைய டைட்டில் தேர்ந்தெடுத்தோம் ஆனா இந்தக்கதைக்கு இதுதான் சரியா இருந்தது. இந்தப்படமே அக்கா தம்பி கதைதான். அதுனால இது சரினு தோணுச்சு .

கார்த்தி : நிறைய டைட்டில் யோசிச்சோம் கிடைக்கல, ஏற்கனவே புக் பண்ணி வச்சுட்டாங்க, கெஞ்சி கூடப்பார்த்தோம் ஆனா கிடைக்கல அப்புறம் இந்த டைட்டில் சரியா இருக்கும்னு டைரக்டர் சொன்னார். அப்புறம் எனக்குள்ள இருக்கிற ஒரு உதவி இயக்குநரா யோசிச்சு, நம்ம மொழில இருக்குற டைட்டில் படத்துக்கும் சரியான டைட்டில்னு இத வச்சுட்டோம்.

“ஜீத்து ஜோசப் படத்துல நடிக்கிறதுக்கான ஸ்கோப் அதிகமா இருக்கும் இதுல எப்படி இருந்தது..?”

நிகிலா விமல் : டைரக்டர் எப்பவும் பர்ஃபெக்ட் 99 க்கும் போக விட மாட்டார் 101க்கும் போக விட மாட்டார். சரியா 100 ல அவருக்கு தேவையானதை வாங்கிடுவார்..!”

“சத்யராஜ், சௌகார் ஜானகி கூட நடிச்சது எப்படி இருந்தது ?”

கார்த்தி :  இதுல எல்லாருக்குமே அற்புதமான கதாபாத்திரம். அவங்களுக்கான ஸ்பேஸ் இருந்தது. ஒரு படத்தில எல்லாரும் இணைஞ்சு நல்லா நடிச்சா தான் படம் நல்லா வரும். படம் முடிஞ்சு போகும்போது அந்தகேரக்டர் நல்லா இருந்ததுல இந்தக் கேரக்டர் நல்லா இருந்தது அப்படினு பேசினாதான் படம் ஜெயிக்கும் நான் அததான் நம்புறேன்..!

மியூஸிக் எப்படி வந்திருக்கு ?

ஜீத்து ஜோசப் : கோவிந்த் வஸந்தா ரொம்ப திறமையானவர். அவர் பண்ணியிருக்கும் படங்கள் பார்த்தாலே தெரியும்.  96 எல்லாம் சூப்பரா பண்ணிருக்கார். இந்தபடத்தில் மூன்று பாடல்கள்  பயங்கரமா பண்ணிருக்கார். பின்னணி இசை எப்படி வந்திருக்குனு பார்க்க நானும் ஆவலா இருக்கேன்.!”

“ஜீத்து சார் நீங்களே திரைக்ககதை மாஸ்டர் இன்னொருவர்  திரைக்கதை வாங்கி பண்றது எப்படி இருக்கு ?”

ஜீத்து : நான் மாஸ்டர் எல்லாம் கிடையாது. மத்தவங்க திரைக்கதைய பண்றதுல சாதகமும் இருக்கு பாதகமும் இருக்கு. இந்தக்கதையில நாலு மூளைகள் வேலை செஞ்சிருக்கு. ஆனா இந்த டீம்ல எனக்கு பிடிச்சது.இறுதியா படம் நல்லா வரனும் அத நோக்கி தான் எல்லாரும் வேலை பாக்குறாங்க யார்கிட்டயும் ஈகோ இல்ல..1′

“ஒரே படத்தில் சிவக்குமார், ஜோதிகா, கார்த்தி, சூர்யா நடிக்கிற வாய்ப்புகள் இருக்கா?”

ஜீத்து ஜோசப்: நல்ல ஐடியா… கொஞ்சம் டைம் கொடுங்க ரெடி பண்ணிட்டு வந்துடுறேன்.!”