சற்குணம் இயக்கியிருந்த இந்தப்படத்தில் வில்லனாக இருந்தாலும் நேர்மையுடன் வந்த ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் ஏற்றிருந்த வேடம் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. அவரது கதாபாத்திரம் செண்டிமெண்ட் நிறைந்த நேர்மையான மனிதராக சித்தரிக்கப்பட்டிருந்ததால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதிலும் களவாணித்தனம் செய்து தேர்தலில் வெற்றி பெறும் விமல் மீது ரசிகர்கள் கோபப்பட்டாலும், இயல்பில் நல்லவரான துரை சுதாகர் கதாபாத்திரம் இறுதியில் பேசும் வசனத்திற்கு கைதட்டுகள் விழுந்தன..
Public Star Durai Sudhakar
அதன் பாதிப்பில் துரை சுதாகர், செல்லும் இடங்களில் எல்லாம், அவரிம் பேசும் பொது மக்கள், “நீங்க தேர்தலில் நின்றால், எங்கள் ஓட்டு உங்களுக்குதான்” என்று சொல்கிறார்களாம். சமீபத்தில் தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் திரையரங்கங்களுக்கு சென்ற போது நடந்திருக்கிறது இந்த அனுபவம்.