April 19, 2024
  • April 19, 2024
Breaking News
September 15, 2019

குற்றவாளி ஓடி ஒளிய முடியாது – சுபஸ்ரீ வீட்டில் கமல் வீடியோ

By 0 857 Views
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை இன்று மாலை சந்தித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பேனர் கலாச்சாரத்தை ஒழியுங்கள்… அப்படி ஒழிக்கவில்லை என்றால் மக்களே அதனை ஒழிப்பார்கள். அதற்கு மக்கள் நீதி மன்றம்’ துணை நிற்கும்..!” என்றார்.
 
ஸம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லையே..?” என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “பேனர் வைத்த குற்றவாளி அதிக நாட்கள் ஓடி ஒளிய முடியாது..!” என்றார் அவர்.
 
அந்த வீடியோ பேட்டி கீழே…