தமிழினத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சியில் இயக்குநர் வெங்கடேஷ் குமார்.ஜி ஈடுபட்டிருப்பது தெரிந்த விஷயம்தான். மேதகு பிரபாகரனாக பாபி சிம்ஹா நடிக்கும் இந்தப்படம் தலைவரின் பிறந்தநாளன்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்தப்படத்தில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடந்து வரும் வேளையில் அதில் நடிக்க உண்மையான தமிழ் வீரர்களே நடித்தால் நல்லது என்று நினைத்த இயக்குநர் இந்த வருடம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
இன்று வெளியிட்டுள்ள அழைப்பு அறிக்கை ஒன்றில் வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களைக் கேட்டிருக்கிறார் வெங்கடேஷ் குமார்.
வீரத் தமிழ் தலைவனின் வரலாற்றில் வீரத் தமிழர்களே நடிப்பது பொருத்தமானதுதான்.
வெங்கடேஷ் குமாரின் அறிவிப்பு கீழே…
Seerum Puli