April 16, 2025
  • April 16, 2025
Breaking News
April 10, 2020

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க நாளை அமைச்சரவை கூட்டம்

By 0 653 Views

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட 19 மருத்துவர்கள் குழுவுடன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அதில் தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாநில முதல்வர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

அத்துடன் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்தும் முடிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.