நடனப்புயல் ‘பிரபுதேவா’ நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கும் படம் லக்ஷ்மி. இதில் அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி ‘தித்யா’, ஷோபியா நடித்திருக்க, இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை விஜய் இயக்கியிருக்கிறார். வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்...
வழக்கமாக மலையாள படைப்பாளிகள் எடுக்கும் படங்கள் நமக்குப் பிடித்தவையாக இருக்கும். மலையாள இயக்குநர்களுக்கென்று ஒரு கதை சொல்லலும் இருக்கும். ஆனால், தமிழில் இது ‘பிளாக் ஹியூமர்’ பட சீசன் என்பதாலோ என்னவோ கேரளாவிலிருந்து வந்து தமிழ்ப்படமெடுத்திருக்கும் இரட்டை இயக்குநர்கள் நிஷாந்த் ரவீந்திரனும், ஜதின் ஷங்கர் ராஜும் நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் பட வரிசையிலேயே ஒரு...
கலைப்புலி எஸ். தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் ராதா மோகன் இயக்கி ரகசியமாகப் படம் பிடிக்கப்பட்ட படம் ’60 வயது மாநிறம்’. வழக்கமாக எஸ்.தாணு தன் படங்களின் பூஜையையே பிரமாண்டமாக நடத்தக் கூடியவர். ஆனால், படப்பிடிப்பு முடியும்வரை இந்தப்படம் வெளியே தெரியாமலேயே நடந்து முடிந்தது. கேட்டால், “இந்தப் படத்தைத் திட்டமிட்டதே அப்படித்தான்..!” என்கிறார் தாணு....
கனமழை காரணமாக கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டது. இதனால் தற்போது வைகை அணைக்கு 4 ஆயிரத்து 941 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. வைகை அணையின் முழு கொள்ளளவு 71 அடியாக இருக்க, இன்று காலை நிலவரப்படி, வைகை அணை 66 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து மதுரை,...
’83 world cup’, ‘என் டி ஆர் சுய சரிதை’ ஆகிய படங்களைத் தயாரிக்கும் Vibri மீடியா நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாகத் தயாரிக்கிறது. இந்திய அரசியல் வானில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தலைவி ஜெயலலிதா. ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் ஒரு பெண் அரசியல்வாதியாக அவர்...
உடல்நலக்குறைவால் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93. எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குக் கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் புகழுடல் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட உடலுக்கு முதலில் வாஜ்பாய் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்....