செல்வராகவன், கேவி ஆனந்த் படங்களைத் தொடர்ந்து சுதா கோங்கரா இயக்கத்தில் ‘சூர்யா38’ படத்தின் பூஜை இன்று நடந்தது. தொடர்ந்து இந்தப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது. இந்தப் படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற ‘சீக்யா எண்டர்டெயின்மெண்ட்’ குணீத் மோங்கா இணைந்து தயாரிக்கிறார். ...
டபுள் மீனிங் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் முதல் படம் ‘வாட்ச்மேன். ஜிவி பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமன், ராஜ் அர்ஜூன், யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை விஜய் இயக்கியிருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 12-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 34 வது படத்தை துரை செந்தில்குமார் இயக்குவது தெரிந்த் விஷயம். நடிகர் தனுஷ் கதாநாயகனாக அவருடன் சினேகா, நவீன் சந்திரா நடிக்கும் அந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்றுவந்தது . இப்போது இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியுடன்...
வரிசைக்கட்டி வரும் வடசென்னைக் கதைகளில் அடுத்து வந்திருக்கும் படம். அங்கே ஒரு குப்பத்துக் குடியிருப்பில் வசிக்கும் ஜிவி பிரகாஷ், பார்த்திபன், பாலோக் லால்வாணி, பூனம் பஜ்வா இவர்களுக்குள் நடக்கும் காதல், மோதல், வஞ்சம், சந்தேகம் என்று பல உணர்வுகள் கலந்த வாழ்க்கைக் கதையாகக் கொடுத்திருக்கிறார் இந்தப்படம் மூலம் இயக்குநராகியிருக்கும் நடன இயக்குநர் பாபா பாஸ்கர்....
பல படங்களில் இடைவிடாமல் நடித்து வருகிறார் யோகி பாபு. அதில் ஒன்றுதான் ‘ஜாம்பி’. இப்படத்தில் ஆன்லைன் பிரபலங்களும் யூடியூப் பிரபலங்களும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் பின்னணி கதை, ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவத்தை சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்புதாசன்,...
சமூகம் சார்ந்தும், சமூகத்தின் தேவை சார்ந்தும் எடுக்கப்படும் படங்கள்தான் உண்மையில் மக்களுக்கான படங்கள் எனலாம். அப்படி சமீப காலமாக தமிழ்ப்பட உலகில் சமூகம் சார்ந்த படங்களைத் தரும் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அதிகரித்து வருவதாகவே கொள்ளலாம். அத்ற்கு மக்களும் ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் இது போன்ற முயற்சிகள் தொடரும். இந்தப்பட இயக்குநர் விஜயகுமாரும் அப்படி மக்களுக்கான...