உழைத்தால் உயர முடியும் என்பதற்கு நானும் சாட்சி – முதல்வர் கடிதம்
முதல்வர் வேட்பாளர் யார் என்பது எங்களுக்கும் நாளைதான் தெரியும் – அமைச்சர் கடம்பூர் ராஜு
சென்னை கலைவாணர் அரங்கில் எழுதுபொருள் அச்சுத்துறை தொடர்பாக ஆலோசனை கூட்டம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது ;
“திரையரங்குகள் என்பது திரைத்துறையில் ஒரு அங்கம்தான் கொரோனா பாதிப்பு க்கு பிறகு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியதால் பல்வேறு தளர்வுகள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
திரைத்துறையின் நலவாரிய அமைப்புகள் மூலம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டி ருக்கிறது…” என்ற அவர், “கொரோனா பாதிப்பு…
Read Moreஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார் கருத்துக் கணிப்புகள் தரும் திடுக் தகவல்
தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை.
கடந்த செப்.28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இரு அணிகளும் காரசார முழக்கங்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு வருகிற அக்.7ம் தேதி ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்து சற்றே சலசலப்பை ஓயச்செய்தார்.
ஆனால்…
Read Moreதமிழகத்தில் தளர்வுகளுடன் அக் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு – முதல்வர்
தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும்.
திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கடற்கரைகளுக்கு தொடர்ந்து தடை நீட்டிப்பு.
புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்கான தடை தொடரும்.
திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது.
கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும்.
அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு.
திரைப்பட படப்பிடிப்புகளில் 100 பேர் வரை பங்கேற்க அனுமதி.
உள்துறை அமைச்சகம் அனுமதித்த வழித்தடங்களில் மட்டுமே விமானப் போக்குவரத்து.
உணவகங்கள், தேநீர் கடைகள்…
Read Moreஎஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு
இந்திய மொழிகள் பலவற்றிலும் 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்தது மட்டுமில்லாமல் ஆறு தேசிய விருதுகள் உள்ளிட்ட பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் அமரர் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம்.
இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மறைந்த அந்த சாதனையாளருக்கு இந்தியா முழுமையில் இருந்தும் அஞ்சலிகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் அவரது உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இதன் எதிரொலியாக தாமரை பக்கத்திலுள்ள எஸ் பி…
Read More5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி
மதுரை மாணவி தற்கொலை இயலாமையால் நேர்ந்தது – ஜீவ ஜோதி
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஏரியாவில் பி.ஜே.பி சார்பில் மோடியின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. இதற்கான ஏற்பாட்டை தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜீவஜோதி செய்திருந்தார்.
அங்கே சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட நிகழ்ச்சிக்கு பின்னர் ஜீவஜோதி செய்தியாளர்களிடம் பேசியது.
“பி.ஜே.பி-யின் வளர்ச்சி தமிழகத்தில் அமோகமாக இருக்கிறது. நிறைய இளைஞர்கள் கட்சிக்கு வருகிறார்கள். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு பிரதமர் மோடியின் பிறந்தநாளைச் சிறப்பாக கொண்டாடியிருக்கிறோம்.
Read More
கொரோனா பரிசோதனைக்கு தமிழகம் முழுவதும் 2000 கிளினிக் – முதல்வர் அறிவிப்பு
மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
ஆலோசனை முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதிலிருந்து…
கொரோனா படிப்படியாக குறைந்து வருவதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். தமிழகத்தின்் பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது.
கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும்…
Read Moreபண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி மற்றும் ஊரடங்கு மத்திய அரசால் நடத்தப்பட்ட தாக்குதல் – ராகுல் காந்தி
பதிலடி கார்ட்டூன் வெளியிட்டு பின்னர் நீக்கிய எல் கே சுதீஷ்
விஜயகாந்த் காலில் சகல அரசியல் கட்சித் தலைவர்கள் விழுவது போன்று கார்ட்டூனை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துவிட்டு, டெலிட் செய்துள்ளார் எல்.கே சுதீஷ்.
அதற்கு அவர் விளக்கமும் கொடுத்துள்ளார்.
“கடந்த, 2016ம் ஆண்டு தினமலர் தேர்தல் களத்தில் வெளியிட்ட கார்ட்டூனை தான் தற்போது முகநூலில் பதிவிட்டேன்.
அன்று அவர்கள் போட்ட கார்ட்டூனுக்கும், இன்று அவர்கள் வெளியிட்டுள்ள கார்ட்டூனுக்கும் (விஜயகாந்தை ஏலம் விடுவதை போல சித்தரித்து) உள்ள வேறுபாட்டை தமிழக மக்கள் அறியவே முகநூலில் பதிவிட்டேன்.
அது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதால் உடனடியாக நீக்கிவிட்டேன்” என்றிருக்கிறார்…
Read More