நேற்று கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியான படங்களில ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் ஒருசேர பாராட்டப்பட்ட சியான்கள் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
எனவே தியேட்டர்கள் தோறும் வெற்றியைக் கொண்டாடி வரும் சியான்கள் படத்தின் கதாநாயகன் கரிகால னும் மற்றும் அவரது குழுவும் அதன் ஒரு பகுதியாக மரம் நடு விழா ஒன்றில் கலந்து கொண்டனர்.
படத்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்களின் பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் மரம் நடும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும்…
நமது அனைவரின் பேரன்புக்கு பாத்திரமான கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துகுமார் அவர்கள் மறைந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டது.
கலை இலக்கியத் துறையில் நா.முத்துகுமார் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிக முக்கியமானது. இந்நிலையில் நா.முத்துக்குமரின் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் அவர் எழுதிய நூல்களைக் கொண்டுசேர்ப்பது நமது கடமையாகிறது.
25/12/2020 மாலை சென்னை கே.கே.நகரிலுள்ள டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், மறைந்த கவிஞர் நா.முத்துகுமாரின் மனைவி ஜீவா மற்றும் அவரது மகன் ஆதவன் முத்துக்குமார் ஆகியோரிடமிருந்து, நா.முத்துக்குமாரின் புத்தகங்களுக்கான…
Read More
நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாக இருந்த காட்டேரி திரைப்படம் தள்ளிப் போவதாக படத்தை தயாரித்திருக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.
அதற்கு காரணம் கொரோனா பரவலின் இரண்டாவது அலை நாடெங்கிலும் பரவி வருவதாக வரும் குழப்பமான செய்திகளை அடுத்து இந்நிறுவனம் இப்படி ஒரு முடிவை மேற்கொண்டதாக அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடல்கள், டீஸர், டிரைலர் என்று அனைத்தும் வெளியான நிலையில் இப்படி படம் தள்ளிப் போவது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் சமூக…
Read More
கடந்த 2015-ம் ஆண்டு கரி என்கிற படத்தை இயக்கி மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் ஷாநவாஸ். அதிதி ராவ் நடிப்பில் உருவான ‘ சுஃபியும் சுஜாதயும்’ படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்த படத்தை இயக்கியது ஷாநவாஸ் என்பதால் அவருக்கு மேலும் புகழ் கூடியது.
இந்நிலையில், காந்திராஜன் என்ற படப்பிடிப்பில் இயக்குநர் ஷாநவாஸ் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, கடந்த சனிக்கிழமை இரவு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்…
Read More
ஐகோர்ட்டில் பிரசாத் ஸ்டுடியோவின் தரப்பில், நிபந்தனைகளுடன் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் இளையராஜாவை அனுமதிக்க தயார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு முன்னதாக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் 50 லட்சம் இழப்பீடு கேட்டு, தங்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு மற்றும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
பிரசாத் ஸ்டுடியோவுக்கு சொந்தமான நிலத்தை உரிமை கோர கூடாது. ஒரு உதவியாளர், ஒரு இசைக்கலைஞர் மற்றும் வழக்கறிஞர் மட்டுமே உடன் வர வேண்டும்.
இந்த நிபந்தனைகளை ஏற்று இன்று (செவ்வாய்) மாலைக்குள் தனது கைப்பட இளையராஜா…
Read More
சுதா கொங்கரா இயக்கத்தில், தனது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பாக நடிகர் சூர்யா தயாரித்து நாயகனாக நடித்த தமிழ் திரைப்படமான சூரரைப் போற்று, 2020ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று.
உலகம் முழுவதும் தமிழ் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட சூரரைப் போற்று, தற்போது 78வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்கிற பிரிவில் போட்டியிடவுள்ளது.
இந்தச் சாதனை ஏன் இன்னும் விசேஷமானது என்றால், இந்த பெருமைக்குரிய…
Read More