அசுரன் படம் கிளப்பிய அரசியல் பிரச்சினை
அசுரன் படம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்ததால் வெளியாகி இரண்டாவது வாரம் தாண்டியும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இடையில் படத்தில் வரும் ஒரு வசனத்தை நீக்க முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதை அடுத்து அந்த வசனம் நீக்கப்பட, அதைத் தவிர படம் எந்த ஒரு அரசியல் பிரச்சினையையும் கிளப்பாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று தூத்துக்குடியில் அசுரன் படத்தைத் தியேட்டரில் சென்று பார்த்தார் திமுக தலைவர் முக ஸ்டாலின். படம் அவருக்கு மிகவும் பிடித்துப்போக, தன் மகிழ்ச்சியை ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
பொதுத் துறை ஊழியர்களுக்கு தமிழக அரசின் போனஸ் அறிவிப்பு
தமிழக அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்…
மாநில அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன் படி போனஸ் பெற உச்சவரம்பு ரூ. 21 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் குரூப் சி-டி ஊழியர்களுக்கு 2018-2019-ம் ஆண்டுக்கான போனஸ் 8.33 மற்றும் ஊக்கத்தொகை 1.67 சதவீதம் என மொத்தம் 10…
Read More
தெலங்கானா கவர்னராக தமிழிசை – டிசம்பரில் தமிழக பாஜக புதிய தலைவர்
தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்ட நிலையில் தமிழக பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று மதுரை விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்தபோது கூறியதிலிருந்து…
“பா.ஜனதா கட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக மாநில தலைவராக சிறப்பாக பணியாற்றிய தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மராட்டியம் உள்பட நான்கு மாநிலங்களுக்கும் கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக பா.ஜனதாவுக்கு புதிய தலைவரை நியமிக்கும்…
Read More
தமிழக அரசு தொடங்கிய கல்வி தொலைக்காட்சி
கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளையும் அனைத்து விளையாட்டு போட்டிகளையும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் ‘கல்வி தொலைக்காட்சி’ தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களாக தொலைக்காட்சியின் சோதனை ஓட்டம் நடந்து வந்த நிலையில் கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு இன்று தொடங்கியது. கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கி வைத்தார்.
கல்வி தொலைக்காட்சியை அரசு கேபிள் டி.வி.யில் சேனல்…
Read More
இந்திய ராணுவத்தை வலிமையாக்க முப்படைகளுக்கும் ஒரே தலைவர் – மோடி
இந்தியாவின் 73-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இன்று (15-08-2019), தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.
அதன்பின்னர், பிரதமர் 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றினார். இந்த விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய சுதந்திர தின…
Read More
சுப்ரீம் கோர்ட் கிளை சென்னையில் அமைய வெங்கையா நாயுடு விருப்பம்
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், ‘கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்’ எனும் தலைப்பில் நூல் ஒன்று தயாரிக்கப்பட்டது. இந்த நூல் கடந்த 2 ஆண்டுகளில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு செய்த பணிகளை உள்ளடக்கமாகக் கொண்டது.
இந்த நூல் வெளியீடு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (11-08-2019) நடைபெற்றது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவே தலைமை தாங்க, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நூலை வெளியிட்டார்.
இவ்விழாவில் தமிழக…
Read More
மறைந்த சுஷ்மா சுவராஜ் பற்றிய சில குறிப்புகள்
பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரியாகவும் திகழ்ந்தவர் சுஷ்மா சுவராஜ்.
கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிக்கிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு சிகிச்சை பலனின்றி தன் 67வது வயதில் சுஷ்மா சுவராஜ் காலமானார்.
அவரது மறைவுக்கு ஜனாதிபதி…
Read More
கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடந்து வந்த காங்கிரஸ் – ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு தோல்வி அடைந்தது. அதில் அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பெறப்பட்டதை அடுத்து குமாரசாமி முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இன்று காலை ஆளுநர் வஜூபாய் வாலாவை…
Read More
நடிகர் சூர்யாவுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு நன்மையே – வைகோ
புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு, வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்து அறிக்கையிலிருந்து…
“இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து, சமூக நீதிக்கு கொள்ளி வைத்து, ஏழை–எளிய, தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை சூன்ய மயமாக்கும் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு கலை உலகின் ஒளிவிடும் நட்சத்திரமான நடிகர் சூர்யா தனது நியாயமான எதிர்ப்பை பதிவு செய்தார். நாட்டின் எதிர்காலத்துக்கே ஆபத்தான கூடாரத்திலிருந்து அதற்கு…
Read More
குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை நிறுத்தம் – மோடி வரவேற்பு
இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’விற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், கடந்த 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
அந்த வழக்கை அவசர அவசரமாக விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
ஆனால் ஜாதவ், கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஈரானில் தனது சொந்த வியாபார நிமித்தமாக…
Read More