April 20, 2024
  • April 20, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • துருவ் க்கு நான் தரும் சொத்து என் ரசிகர்கள் – சீயான்
October 22, 2019

துருவ் க்கு நான் தரும் சொத்து என் ரசிகர்கள் – சீயான்

By 0 664 Views

சீயான் விக்ரமின் வாரிசு ‘துருவ் விக்ரம்’ நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. ‘கிரிசாயா’ இயக்கிய இந்தப் படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இசை விழாவை சிறப்பித்தனர்.

தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா பேசுகையில், “ஆதித்ய வர்மா படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் விக்ரம் ஒருபோதும் உச்ச நட்சத்திரம் போல நடந்து கொள்ளவில்லை. பாசமிகு தந்தையாகவே திகழ்ந்தார். 2021-ம் ஆண்டில், விக்ரம் மற்றும் துருவ் இருவரும் இணைந்து நடித்து நம்மை மகிழ்விப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்..!” என்றார்.

இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் ‘கிரிசாயா’ பேசுகையில், “நான் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன், ஆனால் எனக்கு முதல் அங்கீகாரம் தமிழில்தான் கிடைத்துள்ளது. தமிழ் மொழிக்கும், தமிழ் திரையுலகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!” என்று கூறினார். 

இயக்குனர் கிரிசாயா மற்றும் இணை இயக்குனர் பற்றி பேசிய துருவ், ஆரம்பத்திலிருந்தே இப்படம் திறன் வாய்ந்தோர் கைகளில் இருந்ததை நினைத்துப் பெருமிதம் கொண்டார் .

பின் தனது தந்தை, நடிகர் விக்ரம் பற்றி பேசுகையில், “அப்பாவைப் புகழ என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்தப் படத்திற்கான அவரது அர்ப்பணிப்பு நூறு சதவீதம். என் அப்பா ஒரு நல்ல நடிகர் என்பதை விட அக்கறையும் அன்பும் அதிகம் உள்ள தந்தை என்பது எனக்குத் தெரியும்..!” என்றார்.

மேடையில் தனது மகனுடன் சேர்ந்து பேசுகையில் , நடிகர் விக்ரம் சிரித்தபடி, “துருவைப் போல பேச எனக்குத் தெரியாது” என்றார். தனது 12-ம் வகுப்பு முடிவுகளுக்காக காத்திருக்கும்போதோ அல்லது சேது திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கும்போதோ தான் ஒருபோதும் பதற்றத்தை உணரவில்லை என்று ஒப்புக்கொண்டார். “இன்று மட்டுமல்ல, இப்போது சில காலமாக நான் பதற்றமாக இருக்கிறேன்..!” என்று கூறி  விக்ரம் தனது மகனை எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கான அறிகுறியைக் காட்டினார்.

.ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனுக்கும் நன்றி தெரிவித்ததோடு, அவர்கள் ஒரு கட்டத்தில் ஒரு அறையைப் பகிர்ந்துகொண்டதையும் நினைவு கூர்ந்தார். “இன்று, அவர் இந்தியாவின் சிறந்த டி.ஓ.பிகளில் ஒருவர். எங்கள் கனவின் காரணமாக நாங்கள் இங்கு வந்துள்ளோம். அதைத்தான் நான் துருவிடம் சொன்னேன். உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள்..!” என்றார் விக்ரம்.

கதாநாயகிகள் பனிதா மற்றும் பிரியாவுக்கும் நடிகர் நன்றி தெரிவித்தார்.அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த நடிகர் விக்ரம், “நான் என் மகனுக்கு கொடுக்கும் ஒரே பொக்கிஷம் என் ரசிகர்கள் தான். அந்த காதல் தானாகவே வருகிறது.” என்றார்.