May 4, 2024
  • May 4, 2024
Breaking News

Monthly Archives: September 2018

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக உரிய நடவடிக்கை – அமைச்சர் ஜெயக்குமார்

by on September 7, 2018 0

அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி விமான நிலையத்தில் இன்று (07-09-2018) பேட்டியளித்தார். அப்போது நிருபர்களின் பல தரப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் கூறியதிலிருந்து… குட்கா ஊழல் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், “எங்களுக்கு மடியில் கனமில்லை… வழியில் பயமில்லை…” என்று கூறியிருக்கிறார். இது ஆரம்ப கட்ட விசாரணை என்பதால் அவர் ராஜினாமா செய்ய அவசியமில்லை. மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு பெட்ரோல் டீசல் […]

Read More

தொட்ரா விமர்சனம்

by on September 7, 2018 0

இந்த நாகரிக உலகில்கூட இன்னும் தமிழ்நாட்டளவில் விரவிக் கிடக்கும் சாதீய உணர்வுகளையும், அதன் காரணமாக காதலில் விளையும் ஆணவப் படுகொலைகளையும் அப்பட்டமாக சுட்டிக் காட்டும் படம். அதிலும் நாம் சமீப காலங்களில் அதிகம் அறிந்து வைத்திருக்கும் ஆணவக் கொலைக்கு ஆளான காதல்களைக் கோர்த்து ஒரு திரைக்கதையை எழுதி பரபரப்பாகக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் மதுராஜ். நாயகனுக்கு ‘சங்கர்’ எனவும், நாயகிக்கு ‘திவ்யா’ எனவும் பெயர் வைத்திருப்பதிலும், முதல் காட்சியில் இதயத் துடிப்பு எகிற நாம் சமீபத்தில் பார்த்து […]

Read More

என்னை எமோஷனல் பிளாக் மெயில் செய்த இயக்குநர் – அனுராக் காஷ்யப்

by on September 7, 2018 0

ரிலீஸ் ஆகிஒருவாரம் ஆகியும், ரசிகர்கள் ஆதரவோடு மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’.இந்த வெற்றியைக் கொடுத்த ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பை நடத்தினார் படத்தின் தயாரிப்பாளரான கேமியோ ஃபிலிம்ஸ் சி.ஜே.ஜெயக்குமார். அதிலிருந்து… தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயக்குமார் – “பல பிரச்சினைகளை தாண்டி முதல் நாள் இரவுக் காட்சியில் தான் படம் ரிலீஸ் ஆனது. முதல் வாரத்தில் நல்ல வரவேற்புடன் 16 கோடி ரூபாய் வசூல் […]

Read More

குட்கா வழக்கில் ஐவர் கைது – 20ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

by on September 7, 2018 0

குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் வீடு உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் ஆகிய நால்வரும் இன்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் குட்கா தயாரிப்பு நிறுவனர் […]

Read More

காட்டேரி காட்சிகளை கண்டுபிடித்தால் ஒரு லட்சம் பரிசு – ரவிமரியா ஆஃபர்

by on September 5, 2018 0

தமிழில் ஹாரர் சீசன் இன்னும் முடிவுக்கு வரவில்லை என உணர்த்த வருகிறது ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.இ.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் திரில்லரக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். ‘யாமிருக்க பயமே’என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டீகே இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் . படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, ‘யாமிருக்க பயமே’ படத்தில் […]

Read More

ஆட்சியாளர்களால் என்னை சமாளிக்க முடிகிறதா – டிடிவி தினகரன் கேள்வி

by on September 5, 2018 0

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டிடிவி தினகரன் பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்தார். தொடர்ந்து நிருபர்களிடம் பேசியதிலிருந்து… “சசிகலாவை சந்தித்துப் பேசினேன். அவர் நன்றாக இருக்கிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லையென்று வெளியான தகவல் வெறும் வதந்திதான். அதை யாரும் நம்ப வேண்டாம். சோபியாவின் கைது விவகாரம் தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜனின் கருத்து ஏற்கத் தகுந்த வகையில் இல்லை. பொது வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு சகிப்புத்தன்மை வேண்டும். இந்த […]

Read More

குட்கா விவகாரம் தொடர்பாக 40 இடங்களில் சிபிஐ ரெய்டு

by on September 5, 2018 0

தடையை மீறி தமிழ்நாட்டில் குட்கா முதலான போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இதன் பொருட்டு உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட தி.மு.க. சார்பில் கோரப்பட்டதை அடுத்து ஐகோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் ஜூன் மாதம் விசாரணையைத் தொடங்கினார்கள். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள குட்கா வியாபாரி மாதவராவிடம் விசாரணை நடத்தி அவரது குட்கா குடோனுக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர். […]

Read More