March 28, 2024
  • March 28, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • வீட்டுக் காவலில் விஜய்? அன்பு செழியன் வசம் 65 கோடி பறிமுதல்…
February 6, 2020

வீட்டுக் காவலில் விஜய்? அன்பு செழியன் வசம் 65 கோடி பறிமுதல்…

By 0 471 Views

நேற்று நெய்வேலியில் வைத்து விஜய்யிடம் 5 மணிநேர விசாரணை, பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் காரில் சென்று தனி விடுதியில் வைத்து இரவு 9 மணிவரை விசாரணை பிறகு பனையூரிலுள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று வீட்டில் வந்து விசாரணை என்று வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்து வருகிறது.

இதெல்லாம் ‘பிகில்’ தொடர்பான வருமானம் குறித்த விசாரணைகள்தான் எனத் தெரிகிறது. விஜய்யிடம் விசாரித்த அதே நேரத்தில் பிகில் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனங்களிலும் அதே படத்தின் பைனான்சியரான அன்புச்செழியனின் அலுவலகத்திலும் கூட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம், நேற்று விஜய்யிடம் சொதனை மேற்கொண்ட அதிகாரிகள் போதாது என்று இன்றும் மூன்று அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு சொதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. விஜய் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்கெல்லாம் சோதனைகள் முடிந்தபின் வருமான வரித்துறை அதிகாரிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் சொன்னால்தான் தெரியும். அதேபோல் விஜய் தரப்பிலும் விளக்கம் பெறப்பட்டால் உண்மை நிலவரம் தெரியும்.

இதுவரை நடந்த சோதனைகளில் பிகில் பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகத்தில் வைத்து கணக்கில் வராத 65 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது.

இதெல்லாமே ‘பிகில் படத்தில் இவ்வளவு லாபம், அவ்வளவு லாபம் என்று சோஷியல் மீடியாக்களை கையில் வைத்துக்கொண்டு கூவியதால் வந்த வினை’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

அத்துடன் நேற்று நெய்வேலி பகுதியில் வைத்து மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் திடீரென்று விஜய்யிடம் விசாரனை மேற்கொள்ளப்பட்டதால் மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் படமாவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பில்டப் கொடுப்பானேன்… பிடியில் சிக்குவானேன்..?