உலகப் புகழ்பெற்ற டிஸ்னி தயாரித்திருக்கும் ‘ஃப்ரோஸன்’ படத்தொடரின் இரண்டாம் பாகம் இந்தியாவில் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் என நான்கு மொழிகளில் நவம்பர் 22-ல் வெளியாகவுள்ளது. தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் இப்படத்தின் தமிழ் பதிப்பில் பணிபுரிந்துள்ளார்கள். இப்படத்தின் முன்னோட்டத்திற்க்கான பத்திரிக்கை சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் வசனம் எழுதியுள்ள பாடலாசிரியர் விவேக், ஹீரோயின் கதாபாத்திரமான ‘எல்ஷா’விற்கு பின்னணி பேசியிருக்கும் ஸ்ருதிஹாசன், ‘எல்ஷா’வின் தங்கை பாத்திரமான ‘ஆன்னா’விற்கு பின்னணி பேசியுள்ள திவ்யதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர். “நான் […]
Read Moreவரும் பொங்கல் ஏகத்துக்கு கோலாகலமாக இருக்கும் போலிருக்கிறது. ஏற்கனவே பொங்கலுக்கு ரஜினியின் ‘தர்பார்’ வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அவர் படத்துடன் அவரது மருமகனான தனுஷின் ‘பட்டாஸ்’ படமும் பொங்கல் போட்டியில் குதிக்கும் எனத் தெரிந்தது. ரஜினி ரசிகர்கள் மீதுள்ள நம்பிக்கையால் தனுஷ் அவருடன் போட்டியிட்டது ஆச்சரியமில்லை. ஆனால், டிசம்பரில் வெளியாவதாக இருந்த சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படம் சில தொழில் நுட்ப காரணங்களால் தள்ளிபோய் அதுவும் பொங்கலுக்கு வெளியாவதாக நம்பப்படுகிறது. இதுவே ஆச்சரியத்தைத் தர, இப்போது மிர்ச்சி […]
Read Moreநேற்று காலை ஹைதராபாத்திலுள்ள கச்சேகுடா ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் டிரைவர் உள்பட 11 பேர் காயமடைந்தனர் அல்லவா..? அந்த விபத்து ஏற்பட்டபோது அருகிலிருந்த சிசிடிவி மூலம் அந்த விபத்து எப்படி நடந்தது என்று தெரிய வந்துள்ளது. இரண்டு ரயில் டிரைவர்களுமே ஒன்றை ஒன்று பார்த்து வேகத்தைக் குறைத்துள்ளனர். அதில் அதிவேக ரயில் கிட்டத்தட்ட நிற்கும் நிலைக்கு வந்துவிட, மெட்ரோ ரயில் மட்டும் வேகத்தைக் கட்டுப்படுத்தியும் நிற்காமல் மித வேகத்தில் சென்று […]
Read Moreமலையாள நடிகையான மாளவிகா மோகனன் பிரபல மலையாளப் பட ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனனின் மகள் ஆவார். அப்பாவைப்போல் ஒளிப்பதிவாளராக ஆசைப்பட்டவருக்கு மம்மூட்டியிடமிருந்து நடிகையாக அதிர்ஷ்டம் வந்தது. ஒரு விளம்பரப்படத்தில் மம்மூட்டி நடிக்க அதை ஒளிப்பதிவு செய்த அப்பாவுக்குத் துணையாகப் போனார் மாளவிகா. அங்கே அவரைப் பார்த்த மம்மூட்டி, “உனக்கு என் மகனுடன் நடிக்க விருப்பமா..?” என்று கேட்டு ‘பட்டம் போலே’ படத்தில் துல்கர் சல்மானின் ஜோடியாக்கினார். பிறகு மலையாளப் படங்கள், கன்னடம் என்று நடித்து வந்தவருக்கு உலகப்புகழ்பெற்ற […]
Read Moreநடிகர் அதர்வா எந்த புகாருக்கும் சிக்காத நடிகராக இதுவரை இருந்து வருகிறார். அத்துடன் ‘இயக்குநர்களின் நடிகர்’ என்ற அளவில் கிரியேட்டிவ் விஷயங்களிலும் நல்ல பெயரெடுத்த ஹீரோ. ஆனால், அவர் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்ததில் முளைத்தது பிரச்சினை. அவரது ‘கிக் ஆஸ் என்டர்டெயின்மென்ட்’ என்ற நிறுவனம் ‘எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து ‘செம்ம போத ஆகாதே’ என்ற படத்தைத் தயாரித்தார்கள். அங்கே ஆரம்பித்தது பிரச்சினை. ‘எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பாளரான வி.மதியழகன்தான் இன்று போலீஸ் கமிஷனரைச் சந்தித்து அதர்வா […]
Read More