‘மாண்டி’ என்ற ஆன்லைன் வணிகத்தை ஊக்குவிக்கும் முகமாக அதன் விளம்பரத்தில் இடம்பெற்ற நடிகர் விஜய்சேதுபதியைக் கண்டித்து பல அறிக்கைகள் வந்தன.
அதில் அடுத்தகட்டமாக வணிக போராளி கொளத்தூர் த.ரவி தலைமையில் அவரது அலுலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள்.
அதன்படி இன்று (05-11-2019) காலை அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது.
ஆனால், இதுவரை இது குறித்து விஜய் சேதுபதியோ, அவர் விளம்பரம் செய்த மாண்டி நிறுவனமோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதாவது ‘மக்கள் செல்வன்’ மௌனம் கலைப்பாரா..?
Vijay sethupathi Maandee