January 22, 2025
  • January 22, 2025
Breaking News
November 27, 2018

கஜா நிவாரண நிதிக்கு 1 லட்சம் வழங்கிய கேரள கவர்னர்

By 0 850 Views

தமிழகத்தில் கடந்த வாரம் தாக்கிய கஜா புயல் கரையைக் கடந்தும், புயல் தக்கிய நாகை, திருவாரூர் உள்ளிட்ட கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்னும் இயல்பு நிலை மீளவில்லை. அங்கெல்லாம் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன..

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்து கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டது ஒருபுறமிருக்க, கஜா புயல் நிவாரணமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கேரள மாநில கவர்னர் சதாசிவம் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை இன்று வழங்கியுள்ளார்.

கஜா புயல் பாதிப்புக்காக பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.30 கோடி ருபாய் வரை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.