June 13, 2025
  • June 13, 2025
Breaking News
October 11, 2020

சிஎஸ்கே தோல்வியால் தோனியின் 5 வயது மகளுக்கு பாலியல் மிரட்டல்

By 0 1241 Views

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பிறகு அவர் ஓராண்டாக கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவர் ஓய்வை அறிவித்ததால் ரசிகர்கள் உட்பட அனைவரும் ஏமாற்றமடைந்தனர்.

தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக உள்ளார். நடப்பு ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் தோல்வியை தழுவியது.

இது ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணியின் மோசமான செயல்பாடாகும்.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி சென்னை அணி கொல்கத்தா அணியிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. எளிதாக வெல்ல வேண்டிய போட்டியில் தோல்வியடைந்ததால் சமூக வலைத்தளங்களில் மர்ம நபர்கள் தோனி குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் அவதூறு தகவல்களை பரப்பினர்.

இதன் உச்சகட்டமாக தோனியின் மகளான ஐந்தே வயசான ஜிவா தோனிக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் ட்விட்டரில் பரவியதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்து வருகிறது.

நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது..?