courtesy – primecinema
Read Moreகொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த வாரம் முதல் மார்ச் 31ம் தேதி வரை படப்பிடிப்புகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டதன் விளைவாக சினிமா சங்கங்களின் கூட்டமைப்பான பெப்ஸியைச் சேர்ந்த சுமார் 25,000 தொழிலாளர்கள் வேலையின்றி முடங்கியுள்ளனர். அவர்களில் 15,000 பேரின் வாழ்வாதாரம் அன்றாடம் படப்பிடிப்பு நடந்தால் மட்டுமே என்று இருக்க, டிவி தொடர்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு விட மிகவும் பாதிப்படைந்து இருக்கிறார்கள். இதனால் பெப்சி அமைப்பின் தலைவரான ஆர்.கே.செல்வமணி இன்று நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமாவினால் வளர்ச்சி […]
Read Moreகொரோனா முன் எச்சரிக்கை காரணமாக மாநிலம் முழுவதும் நாளை மாலை முதல், 144 தடை உத்தரவு அமலாகிறது. இதனால் சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளால் கோயம்பேடு பேருந்து நிலையம் நிரம்பி வழிகிறது. பயணிகள் பலரும் பஸ்களில் இடம் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி விபரம்: “சென்னையில் இருந்து நாளை மாலை வரை, வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். ஆகையால் பயணிகள் கவலைப்பட தேவையில்லை. சென்னை மாநகரப் […]
Read Moreநமது மத்திய,மாநில அரசுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , முழுக்க முழுக்க, மக்களிடம் அது சார்ந்த விழிப்புணர்வை மேலும் தூண்டும் விதமாக கட்டில் திரைப்படக்குழு, கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டியை அறிவித்திருக்கிறது…. 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி, kattiltamilfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 31(2020) ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் அனுப்பவும். முதல் பரிசு : 25,000 இரண்டாம் பரிசு : 15,000 மூன்றாம் பரிசு : […]
Read Moreஇன்று 22 மார்ச் 2020 அன்று சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இன்று நாடுமுழுவதும் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளே முடங்கினர். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இன்று பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தலா ஒருவர் பலியாகியதை அடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 370-ஐ தாண்டியுள்ளது. இதனால் மத்திய அரசு கொரோனாவால் பாதித்த நாட்டில் உள்ள 75 மாவட்டங்களில் தேவைப்பட்டால் ஊரடங்கு […]
Read Moreநாடக மேடை தொடங்கி நடிப்பது மட்டும் அல்லாது எழுத்தாளர், இயக்குனர், டிவி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர் விசு. 1945ஆம் ஆண்டு திருநெல்வேலி களக்காட்டில் பிறந்த விசுவின் முழுபெயர் M.R விஸ்வநாதன். நாடக மேடைகளில் புகழ்பெற்ற இவர் சினிமாவில் இயக்குநர் கே.பாலசந்தரிடம் துணை இயக்குனராக பணியாறினார். அப்போது சிறுசிறு கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். விசு நடித்த முதல்படம் ரஜினியின் ‘தில்லு முல்லு’ அந்த படத்தில் வசனமும் எழுதிய இவர் டப்பிங்கும் செய்துள்ளார். மேலும் அவரே கதை வசனம் […]
Read Moreசமீபத்தில் நடிகர் ப்ரித்வி ராஜ் மற்றும் பிஜு மேனன் இணைந்து நடித்து வெளியான மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. கேரள, தமிழ் நாட்டின் எல்லைப் பகுதியில் சந்தித்துக் கொள்ளும் இருவருக்கிடையே நடக்கும் ஈகோ உள்ளிட்ட சண்டையை மிகவும் வித்யாசமான கோணத்தில் காண்பிக்கும் இந்த திரைப்படத்திற்கு இருமாநிலத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியிருப்பது தெரிந்த விஷயம். அதில் நடிக்கப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் […]
Read Moreமணிரத்னம் – சுஹாசினி தம்பதியின் மகன் நந்தன் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். இப்படி வெளிநாட்டிலிருந்து இந்தியா வருபவர்கள் கொரோனா தொற்று ஏற்டாமல் இருக்க, அல்லது ஏற்படுத்தாமல் இருக்க 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று மருத்துவத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி அவர் தன் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும் இப்படி தனிமைப்படுவதன் மூலம் அவரிடம் தொற்று ஏற்கனவே ஏற்பட்டிருந்தாலும் அந்த வைரஸ் அழிக்கப்பட்டு விடும். இதனை வீடியோ எடுத்து […]
Read More