May 5, 2024
  • May 5, 2024
Breaking News

Monthly Archives: March 2020

தன் தம்பி மரணம் குறித்து ஆனந்தராஜ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

by on March 6, 2020 0

புதுச்சேரி திருமுடி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கனகசபை. இவர் நடிகர் ஆனந்த்ராஜின் தம்பி. கோவிந்த சாலை பகுதியில் உள்ள திருமுறை நகரில் கனகசபை வசித்து வந்தார். ஏலச்சீட்டு, பைனான்ஸ் நடத்தி வந்த கனகசபை, நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ஏலச்சீட்டு போட்டவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு தங்களது பணத்தை உடனடியாகத் தரவேண்டும் என்று வாதிட்டார்கள். இந்நிலையில் கதிர்காமம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கனகசபையின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏலச்சீட்டு காரணமாகவும் […]

Read More

ஜிப்ஸி திரைப்பட விமர்சனக் கண்ணோட்டம்

by on March 6, 2020 0

அந்தக் கூட்டத்தில் நானும் இருந்தேன். ராஜு முருகனைப் படித்தவர்கள் அவர் நல்ல படங்களைத் தரவல்லவர் என்பதைப் படம் இயக்குவதற்கு முன்பே தெரிந்து வைத்திருந்த கூட்டம்தான் அது. ஏனென்றால், எழுத்து, இசை, திரைப்படம், பாடல்கள் இயற்றுதல் எல்லாமே ஒன்றுக்குள் ஒன்று தொடர்பு கொண்டவைதான். அடிப்படை, உந்த வைக்கும் உணர்ச்சி மட்டுமே. தன் கலையில் சரியாக உணர்ச்சியைக் கடத்தத் தெரிந்தவர்கள் ஆகச் சிறந்த படைப்புகளைத் தர இயலும். அதைத் தன் ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ என்று இரு படங்களின் வாயிலாகவும் நிரூபித்தார் […]

Read More

காலேஜ் குமார் திரைப்பட விமர்சனம்

by on March 6, 2020 0

ஒரு இந்திய மொழியில் வெற்றிபெற்ற கதைக்கு எப்போதுமே பிற மொழித்தயாரிப்பில் முதலிடம் உண்டு. அப்படி மூன்று வருடங்களுக்கு முன்னால் கன்னடத்தில் தயாராகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ் ரீமேக் படம்தான் இந்த ‘காலேஜ் குமார்’. குடும்ப உறவுகளும், கல்விச் சிக்கல்களும் அதிகமாகி வரும் இக்காலக்கடத்தில் இப்படத்தின் கதை முக்கியத்துவம் பெறுகிறது. முயற்சி இருந்தால் எந்த வயதிலும் கல்வி கற்கலாம் என்பதையும், அதே நேரம் கல்வி மட்டுமே முன்னேற்றத்துக்கான வழி என்று கொள்ளாமல் கல்வியை மாணவர்களின் முதுகில் சுமையாக […]

Read More

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை 4 முறை பார்த்தேன் – கௌதம் மேனன்

by on March 5, 2020 0

அறிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமியின் இந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை தற்போது தமிழ் சினிமாவே கொண்டாடி வருகிறது. அந்த அளவுக்கு படம் நன்றாக இருக்கிறது.   அதே சமயம், படத்திற்கு சரியான முறையில் விளம்பரம் செய்யாததால், மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலிலும் மிகப்பெரிய சாதனையை படைக்க வேண்டிய படம் தற்போது தடுமாறுவதாக கூறப்படுகிறது.   இந்த நிலையில், படத்தை பாராட்டியதோடு, மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படக்குழுவினர் […]

Read More

கொரானோ வைரஸ் பீதியில் பின்வாங்கிய அண்ணாத்த

by on March 5, 2020 0

 சன் பிக்சர்ஸ் தயாரிப்பில ரஜினி நடிக்க சிவா இயக்கத்தில் உருவாகும் படம் ‘ அண்ணாத்த…’ இந்தப்படத்தின் முதல் 2 கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு, கொல்கத்தா, புனே உள்ளிட்ட வடமாநில நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், அதற்கு பதிலாக ராமோஜிராவ் திரைப்பட நகரிலேயே தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிற […]

Read More

இயக்குனர்களுக்கு தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவின் உருக்கமான பதிவு

by on March 5, 2020 0

திரைத்துறைக்கு வந்து 11 வருடங்கள் கடந்துவிட்டது. தினமும் இரண்டிற்கும் மேற்பட்ட நண்பர்கள் இயக்குனர் ஆர்வத்துடன் அணுகும் பொழுது நாம் இருக்கும் துறை மேல் இருக்கும் ஈர்ப்பு இன்னும் குறையாமல் இருப்பது நமக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தாலும் இனம் புரியாத கவலை ஒரு ஓரமாக எட்டிப் பார்க்கிறது. பல்வேறுபட்ட துறைகள் இங்கு இருந்தாலும், திரைத்துறை என்று வரும்பொழுது அதன் மேலுள்ள கனவும் எதிர்பார்ப்பும் அளப்பறியது. இந்த கனவுகளுக்குப் பின் ஒரு தனி நபரல்லாது அவரது உறவுகள் தொடங்கி நண்பர், […]

Read More

நடிகர் ஆனந்தராஜின் தம்பி தற்கொலை

by on March 5, 2020 0

புதுச்சேரி கோவிந்தசாலை திருமுடிநகரை சேர்ந்தவர் கனகசபை(55). இவர் ஏலசீட்டு நடத்தி வந்தார். இந்த நிலையில் இன்று வீட்டு படுக்கை அறையில் விஷம் அருந்தி, தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்தவுடன் பெரியகடை போலீசார் விரைந்து சென்று, கனகசபை உடலை கைப்பற்றி வபிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்… தற்கொலை செய்து கொண்ட கனகசபை, பிரபல திரைப்பட நடிகர் ஆனந்தராஜின் தம்பி ஆவார்.

Read More

பிரபல வில்லன் நடிகரின் மகன் பாலியல் வழக்கில் கைது

by on March 4, 2020 0

காலேஜ் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை சொல்லி எங்கெங்கோ அழைத்துக் கொண்டு போய், குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, பிரபல வில்லன் நடிகர் சூர்ய பிரகாஷின் மகன் விஜய் ஹரிஷைக் காவல் துறையினர் கைது செய்தது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தூரல் நின்னு போச்சு, முதல் மரியாதை, வசந்த காலம் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தவர் நடிகர் சூர்ய காந்த். இவர் […]

Read More