March 28, 2024
  • March 28, 2024
Breaking News
August 16, 2020

சென்னை மதுப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

By 0 490 Views
கொரோனா தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறக்கப்படாமல் இருந்தன.
 
அதன்பின் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்து சென்னை மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர்த்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
 
இது சென்னையில் உள்ள மது பிரியர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி  இருந்தது. ஆனால், சென்னையில் வைரஸ் தொற்று அதிகமாக இருந்ததால் சென்னையில் மதுக்கடைகள் திறக்கப் படாமலேயே இத்தனை நாள் இருந்தது.
 
இந்நிலையில்  நாளை மறுதினத்தில் (ஆகஸ்ட் 18) முதல் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மது வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிறுத்தப்பட்டுள்ளது.
 
காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் எனவும் டோக்கன்  அடிப்படையில் ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் மட்டும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையில் மால்களிலும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.