April 26, 2024
  • April 26, 2024
Breaking News
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • கர்நாடகாவின் புதிய செயல்பாடு குறித்து விவாதிக்க முதல்வரிடம் ஸ்டாலின் கோரிக்கை
June 30, 2018

கர்நாடகாவின் புதிய செயல்பாடு குறித்து விவாதிக்க முதல்வரிடம் ஸ்டாலின் கோரிக்கை

By 0 961 Views

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பேர் நியமிக்கப்பட்ட நிலையில் ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும், மத்திய அரசு பிரதிநிதிகளும் பங்கேற்கும் இக்கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ள நிலையில், கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் குமாரசாமி இன்று அழைப்பு விடுத்தார்.

குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா அரசு இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்நிலையில் கர்நாடக அரசின் , காவிரி விவகார புதிய நிலைப்பாடு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது; கர்நாடக அரசின் புதிய நிலைப்பாட்டால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை பற்றி விவாதிக்க முதலமைச்சர் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமரை சந்தித்து காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் முதலமைச்சரை வலியுறுத்தியிருக்கிறார்.