’சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு! ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங்கர் வர்மா தயாரிப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4, 2025 அன்று ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் இன்று நடைபெற்றது. நடிகை ஆராத்யா தேவி, “நான் கேரளா பொண்ணு. […]
Read Moreகேரளத்தை இரட்சிக்க வந்த எம்பிரானாக மோகன்லாலை பாவித்து இந்த படத்தின் முதல் பாகமான லூசிபரை இயக்கிய பிருத்திவிராஜ் சுகுமாரனே இந்த இரண்டாவது பாகத்தையும் இயக்கியிருக்கிறார். மதக் கலவரத்துடன் வட மாநிலத்தில் தொடங்குகிறது படம். ஒரு இஸ்லாமியரையும் தப்ப விடாமல் குடும்பம் குடும்பமாகக் கொன்று குவிக்கிறது மத வெறியாளர் கூட்டம். அதனை தலைமை தாங்கி நடத்துகிறார் அபிமன்யு சிங். அப்படி கொடூரமாகக் கொல்லப்பட்ட ஒரு குடும்பத்தின் ஒரே வாரிசாக நிற்கும் சிறுவனின் அவலக் குரலுடன் முடிகிறது அந்தப் பகுதி. […]
Read Moreஒரு சூரனின் வீர தீரத்தை சொல்வதுதான் கதை. அந்த சூரன் சீயான்தான் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் படம் ஆரம்பித்து 20 நிமிடங்கள் கழித்துதான் திரையில் வருகிறார் விக்ரம். அதுவரை பரபரக்கும் திரைக்கதையில் எஸ்.ஜே. சூர்யாவும், மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவும் மாறி மாறி ஸ்கோர் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் இன்னும் கொஞ்ச நேரத்தில் சீயான் திரையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொள்ளப் போகிறார் என்கிற ‘கெத்து’தான். பெரியவர் ரவி அவர் மகன் கண்ணன் என்று […]
Read More“கொஞ்சநாள் பொறு தலைவா” டிரெய்லர் வெளியீட்டு விழா திரையில் ! ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் “கொஞ்ச நாள் பொறு தலைவா”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்…. *நடிகை சுதா பேசியதாவது…* மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பது பெருமை, எனக்கு வாய்ப்பு […]
Read More‘மக்களுக்குத் தேவை ஆட்சி மாற்றம் அல்ல… அரசியல் மாற்றம்..!’ என்கிற வலுவான விஷயத்தை நீட்டி முழக்கி நிமிர்ந்து குனிந்து வளைந்து படுத்தெல்லாம் சொல்லி இருக்கும் படம். பெண்ணியவாதியான அஞ்சனா கீர்த்தி, தன்னுடன் ஒரு செம்படையைத் தயார் செய்து கொண்டு அரசியலில் மாற்றம் நிகழ்த்தப் போகிறேன் என்று கிளம்புகிறார். அவரது குடும்பம் சட்ட வல்லுநர்களைக் கொண்டிருக்க அப்பாவே நீதிபதியாக இருந்தும், அத்தனை பேரின் அறிவுரையையும் மீறி தன் போக்கில் போய்க்கொண்டு இருக்கிறார் அஞ்சனா. சட்டமன்றத்தை முற்றுகையிடப் போகிறோம் என்று […]
Read Moreஒரு கதவு – அந்தக் கதவுக்குப் பின்னால் என்ன நடக்கிறது… அல்லது அதைத் திறந்தால் என்ன நடக்கும் என்பது மாதிரியான எதிர்பார்ப்பில் போனீர்களானால் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். இன்னும் சொல்லப் போனால் படத்தில் எந்த டோருக்கும்… அதாவது கதவுக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லை. பிறகு ஏன் இப்படி ஒரு தலைப்பு என்றால் நாம் வாழும் உலகத்திலேயே நம் கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்யங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நாம் பார்க்க முடியாத அளவில் ஒரு கதவு இருக்கிறது அந்தக் கதவைத் […]
Read More