April 25, 2024
  • April 25, 2024
Breaking News
November 15, 2020

இது வரை இதுபோல் பயந்தது இல்லை – சந்தானம்

By 0 447 Views

சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் பிஸ்கோத். இப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியேட்டர்கள் திறந்து இருப்பதால், பொது மக்களை சந்திக்க நேரடியாக தியேட்டருக்கு சென்று இருக்கிறார் சந்தானம்.

அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த சந்தானம், கொரோனா பாதிப்பில் சினிமா துறை 100 சதவிகிதம் அடிபட்டு இருக்கிறது. பிஸ்கோத் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தோம். அப்புறம் திரையரங்குகள் திறப்பதால் அவசரசரமாக வெளியிட்டோம்.

மக்கள் தியேட்டருக்கு வருவார்களா என்று பெரிய பயம் இருந்தது. இது வரைக்கும் இதுபோல் பயந்தது இல்லை. மக்கள் வந்து இருக்கிறார்கள். மக்களுக்கு பெரிய நன்றி. ரசிகர்களுக்கு நன்றி என்றார்.