என்னை அன்புடன் “அண்ணே…” என்றழைத்த நா.முத்துக்குமாரை நாமிழந்த மூன்றாவது நினைவு தினமின்று. (ஆகஸ்டு 14) காலம் கார்கால மேகம் போல வேகத்துடன் கடந்துகொண்டேதான் இருக்கிறது. முதல் முதலில் நான் முத்துக்குமாரை சந்தித்தது (நாம் தமிழர்) சீமானின் வீட்டில். நான் அப்போது தினமணி நாளிதழில் எழுதிக் கொண்டிருந்தேன். என்னை சீமான் “ஐயா…” என்று அழைக்க நானும் அவ்வாறே அவரை அழைப்பேன். அவர்கள் இருவரும் இப்போதிருக்கும் உயரங்களில் அப்போது இல்லை. ஒரு இயக்குநராக மட்டும் சீமான் அறியப்பட்டிருந்த காலம். அவர் […]
Read Moreநடித்து நல்ல பெயர் எடுக்கிறாரோ இல்லையோ, வம்பு வளர்த்தே பெயரெடுப்பதில் சிம்புவுக்கு நிகர் சிம்புதான் – இல்லையென்றால் சிம்புவுக்கு நிகர் ‘எஸ்டிஆர்’தான் எனலாம். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் அவருக்கு ஒரு படம் பண்ணித் தருவதாக வாகுறுதி தந்து அந்தப்படத்துக்கு இயக்குநராக வெங்கட்பிரபுவை ஒப்பந்தம் செய்ய வைத்து, படத்துக்கு ‘மாநாடு’ என்று பெயர் வைத்தார்கள். கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்தும் சிம்பு சரியாக ஒத்துழைக்காத காரணத்தினால் அவரைத் தன் படத்திலிருந்து நீக்குவதாக நொந்து போய் […]
Read Moreகன்னடத்தில் முனி ரத்னா எழுதி தயாரித்து நாகன்னா இயக்கியுள்ள குருக்ஷேத்ரம் 3டி படத்தினை தமிழில் கலைப்புலி எஸ் தாணு வெளியிடுகிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலைப்புலி எஸ். தாணு பேசியதிலிருந்து… “1985ல் நான் தயாரித்த முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனை நடிக்க வைத்தேன். இப்போது இப்படத்தில் அவரது நடிப்பு அற்புதமாக அமைந்துள்ளது. காதல், நட்பு, சகிப்புத்தன்மை என அனைத்தும் இப்படத்தில் அடங்கியுள்ளது. கர்ணன் என்றால் நினைவிற்கு வருவது நடிகர் திலகம் […]
Read Moreவிமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் […]
Read Moreஜெயம் ரவி நடிப்பில் நாளை மறுநாள் சுதந்திர தினத்தன்று வெளியாகும் ‘கோமாளி’ படம் குறிப்பட்டபடி வெளியாகுமா என்ற அளவில் திடீர்ப் பிரச்சினைகள் முளைத்தன. ஒன்று படத்தை வெளியிடும் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட ஒரு படத்தின் நஷ்ட ஈட்டைத் தந்தால்தான் திருச்சியில் இந்தப்படத்தை வெளியிடுவோம் என்று திருச்சியைச் சேர்ந்த வினியோகஸ்தர்கள் சிலர் போர்க்கொடி தூக்க, அந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்தின் பார்வைக்கு வந்து பிரச்சினையைத் தீர்க்க பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தன. இன்னொரு பக்கம் படத்தின் கதை தன்னுடையது […]
Read More