சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் கமர்ஷியல் படங்களை மட்டும் தயாரிப்பதோடல்லாமல், நல்ல திரைப்பட முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வருகிறது. தரமான நல்ல படங்களை தொடர்ந்து தயாரித்தும், சில நல்ல கருத்துள்ள படங்களை கண்டறிந்தும், அவற்றை வாங்கி வெளியிட்டும் மாறுபட்ட சினிமா அனுபவங்களுக்கு தங்களது ஆதரவை தொடர்ந்து தந்து வருகிறது. அந்த வகையில் மிக...
கார்த்தி, ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’ ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அமைவதால் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கிறது. டிசம்பர் 20-ம் தேதி ‘தம்பி’ படம் வெளியாக இருக்கும் நிலையில் கார்த்தி படம் குறித்து பேசினார். அதிலிருந்து… “ஜீத்து ஜோசப் சார் இயக்கம் என்றதும் சிறப்பாகத் தோன்றியது. ஏனென்றால், அவருடைய ‘த்ரிஷ்யம்’ பார்த்து மிரண்டு போயிருக்கிறேன். அவருடைய ஒவ்வொரு படமும்...
புதிதாக தயாராகியுள்ள ‘வணிகன்’ என்ற படத்தின் ஆடியோ உரிமையை வாங்கி அப்படம் மீதான நம்பிக்கையை கூட்டி இருக்கிறார் இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. FEATURED PRODUCTIONS என்ற பட நிறுவனம் சார்பில் செந்தில் விஜயகுமார் தயாரிப்பில் டேனியல் VP எழுதி இயக்கியுள்ள படம் ‘வணிகன்’. நேரம், பிரேமம், வெற்றிவேல் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில்...
வடசென்னைக் கதைகள் என்றாலே கால்பந்து விளையாடுவதும், வன்முறைக் களத்தில் ஈடுபடுவதும்தான் என்ற இலக்கணம்தான் தமிழ் சினிமாவில் எடுத்தாளப்படுகிறது. இதிலும் அதேதான் என்றாலும் இளைஞர்களின் கால்பந்தாட்டக் கனவையும், வன்முறைக் களத்தையும் உள்ளது உள்ளபடி நடப்பது நடந்தபடி காட்டியிருப்பதுடன் இன்றைய தலைமுறை அந்த அடையாளங்களிலிருந்து மீண்டு சாதிக்க விரும்புவதைக் காட்டியிருக்கிறார் தமிழில் அதிக பட்ச விளையாட்டுப் படங்கள்...
வேலைக்குச் செல்லும் பெண்கள்தான் விதவிதமான ஆபத்துகளை எதிர்கொள்கிறார்கள் என்றால் வீட்டிலிருக்கும் பெண்களும் நிறைய ஆபத்துகளை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அப்படி யாரும் யூகித்திராத ஒரு முக்கியமான ஆபத்தைச் சொல்லி நம்மை சீட்டின் நுனியில் கட்டிப் போடுகிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீ செந்தில். சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சுற்றி நடக்கும் கதை. நான்கு பெண்கள் அடுத்தடுத்து மர்மமான...