May 5, 2024
  • May 5, 2024
Breaking News
October 21, 2023

புற்றுநோயில் மீண்டவர்களுக்கு பில்ரோத் மருத்துவமனை தந்த இன்ப அதிர்ச்சி..!

By 0 138 Views

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக புற்று நோயியல் துறையில் முன்னணி சேவையை வழங்கி வருகின்றது பில்ரோத் மருத்துவமனை.

வருடம் தோறும் இந்த அக்டோபர் மாதம் புற்றுநோய் சிகிச்சையாளர்களைக் கருத்தில் கொண்டும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ‘பிங்க் அக்டோபர்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த பிங்க் அக்டோபரில் நமக்கு ஒரு நல்ல செய்தியை சொல்கிறது பில்ரோத் மருத்துவமனை. இதுதான் அந்த செய்தி –

புற்றுநோய் என்பது ஒரு பயங்கரமான நோய் அல்ல. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான். புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் போது இலக்கு சிகிச்சை, மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் இப்போது அதிகமான மக்கள் புற்றுநோயிலிருந்து குணமாகலாம்..!

 இப்படி கேன்சர் எனப்படும் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் கேன்சர் சர்வைவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்த பிங்க் அக்டோபரைக் கருத்தில் கொண்டு பில்ரோத் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர். ராஜேஷ் ஜெகநாதன்  புற்றுநோய் வந்து மீண்டவர்களை உற்சாகப்படுத்தும் பொருட்டும் அவர்களது நல்வாழ்வை மேம்படுத்தவும் 22.10.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.

அதன்படி இந்த வாரம் வெளியாகியுள்ள நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கான 4500 டிக்கெட்டுகளை கேன்சர் சர்வைவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் இலவசமாக அளித்துள்ளார்.

பி.வி.ஆர் தியேட்டர்களின் அனைத்து திரைகளிலும் ஓடிக்கொண்டிருக்கும் லியோ படத்துக்கான டிக்கெட்டுகள் இவை. லியோ படத்துக்கான டிக்கெட்டுகளுடன் இலவச உணவு கூப்பனும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கேன்சர் சர்வைவர்களுக்கு மட்டுமல்லாமல் பில்ரோத் மருத்துவமனையின் அனைத்து மருத்துவர்கள், பணியாளர்கள், வார்டு உதவியாளர்கள் தங்கள் முழு குடும்பத்துடன் இந்த படத்தை இலவசமாக பார்த்து உணவும் அருந்த முடியும்.

இந்தச் செய்தியை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த பில்ரோத் மருத்துவமனையின் மருத்துவர் தீபா, “பில்ரோத் குடும்பமாகிய நாங்கள் கருணை அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயத்தை நம்புகிறோம்.

இது எங்கள் அன்புக்குரிய எம்.டி டி.ஆர்.ராஜேஷ் ஜெகநாதனின் முதன்மையான நோக்கம். மருத்துவமனையை இன்றும் என்றென்றும் சிறப்பாக வைத்திருக்க இதுவே எங்களுக்கு உதவுகிறது. தனது ஊழியர்களுக்கும் நோயாளிகளுக்கும் காட்டிய அன்பிற்காக நாங்கள் எங்கள் எம்.டி க்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..!” என்றார்.

இந்த பிங்க் அக்டோபர் மாதத்தில் கேன்சர் சர்வைவர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்த பில்ரோத் மருத்துவமனை எம்.டி டி.ஆர்.ராஜேஷ் ஜெகநாதனைப் பாராட்டலாம்..!