May 5, 2024
  • May 5, 2024
Breaking News
October 22, 2023

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பைக்கத்தான் பேரணி

By 0 155 Views

காவேரி மருத்துவமனை பெண்கள் மோட்டோ ஸ்போர்ட் கிளப்புடன் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பைக்கத்தான் பேரணி

200 பெண் பைக்கர்கள் பங்கேற்றனர்…

 சென்னை, 22 அக்டோபர் 2023: தமிழ்நாட்டின் முன்னணி பல்நோக்கு சுகாதார நிறுவனம் காவேரி குழும மருத்துவமனைகளின் ஒரு பிரிவான காவேரி மருத்துவமனை ஆழ்வார்பேட்டை மற்றும் வடபழனி கிளைகள் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மகளிர் மோட்டோ ஸ்போர்ட் கிளப்புடன் இணைந்து பைக் பேரணியை நடத்தியது.

வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனையில் இருந்து பேரணியை விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபாகர ராஜா திரு சுரேஷ்குமார் ஐஏஎஸ் மற்றும் காவேரி மருத்துவமனை வடபழனியின் செயல்பாடுகள் பிரிவு இயக்குநர் திரு.கிங்ஸ்லி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஆர்.ஏ.புரம் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் பேரணி நிறைவடைந்தது. அங்கு பைக் பேரணியில் பங்கேற்ற இருசக்கர வாகன பெண் ஓட்டுநர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

“கிட்டத்தட்ட 60விழுக்காடு பெண்கள் புற்றுநோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஆரம்பகால நோயறிதல் மற்றும் விளைவுகளை தெரிந்துகொள்ள மார்பக புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகளை அறிந்திருப்பது முக்கியம்.

எனவே, ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பகால நோய் கண்டறிதல், அறிகுறிகள் மற்றும் சுய பரிசோதனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த பேரணியின் நோக்கமாகும். உன்னத முயற்சிக்காக மகளிர் மோட்டோஸ்போர்ட் கிளப்புடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி கூறினார்.

காவேரி மருத்துவமனை அனைத்து வயதினருக்கும் புற்றுநோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் முன்னணியில் உள்ளது. காவேரி புற்றுநோய் மையம் உயர் பயிற்சி பெற்ற அறுவை சிகிச்சை, மருத்துவம் மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்களைக் கொண்டுள்ளது, அவர்கள் அதிநவீன உள்கட்டமைப்புடன் மேம்பட்ட சிகிச்சையை வழங்குகிறார்கள்.

குணப்படுத்துவதை விட தடுப்பதே சிறந்தது என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் எங்கள் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகவும், சமூகத்திற்குத் திருப்பித் தருவதின் ஒரு பகுதியாகவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இலவச மேமோகிராம் பரிசோதனையை உள்ளடக்கிய விழிப்புணர்வு முயற்சிகளை நாங்கள் ஏற்பாடு செய்து வருகிறோம்,” என்று காவேரி குழும மருத்துவமனைகள் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு, மாண்புமிகு தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியம், நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக விளையாட்டு பிரிவுச் செயலாளருமான திரு தயாநிதி மாறன், ஆகியோர் தலைமை வகித்தனர். மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ மயிலை த வேலு, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரிமருத்துவமனையின் ரேடியேஷன் ஆன்காலஜி மூத்த ஆலோசகர் மற்றும் இயக்குனர் டாக்டர் ஏ.என். வைத்தீஸ்வரன் , காவேரி மருத்துவமனை ஆழ்வார்பேட்டை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் மகேஷ் குமார் , தமிழ்நாடு தடகள சங்கத்தின் செயலாளரும் இந்திய தடகள சம்மேளன இணைசெயலாளருமான திருமதி சி லதா, பெண்கள் மோட்டார் ஸ்போர்ட் கிளப் தலைவி நிவேதா ஜேசிகா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனையை ஊக்குவிப்பதற்காக ஒரு மேமோகிராம் பரிசோதனை வாகனமும் நிகழ்ச்சியில் நிறுத்தப்பட்டிருந்தது.