April 20, 2024
  • April 20, 2024
Breaking News

Tag Archives

ஓபிஎஸ் ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்

by on January 9, 2020 0

தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ஒட்டி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்ததை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியது. அதன்படி மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த எட்டு துணை ராணுவப் படை வீரர்கள் ஓ.பி.எஸ்ஸுக்கு பாதுகாப்பு கொடுத்து வந்தனர். தமிழகத்தில் மேலும் இரண்டு முக்கிய வி.ஐ.பி-க்களுக்கு இசட் பிரிவு எனப்படும் சி.ஆர்.பி.எஃப் கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் […]

Read More

தமிழக அரசு தொடங்கிய கல்வி தொலைக்காட்சி

by on August 26, 2019 0

கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளையும் அனைத்து விளையாட்டு போட்டிகளையும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் ‘கல்வி தொலைக்காட்சி’ தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக தொலைக்காட்சியின் சோதனை ஓட்டம் நடந்து வந்த நிலையில் கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு இன்று தொடங்கியது. கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கி வைத்தார். கல்வி தொலைக்காட்சியை அரசு கேபிள் டி.வி.யில் […]

Read More

சுப்ரீம் கோர்ட் கிளை சென்னையில் அமைய வெங்கையா நாயுடு விருப்பம்

by on August 11, 2019 0

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், ‘கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்’ எனும் தலைப்பில் நூல் ஒன்று தயாரிக்கப்பட்டது. இந்த நூல் கடந்த 2 ஆண்டுகளில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு செய்த பணிகளை உள்ளடக்கமாகக் கொண்டது. இந்த நூல் வெளியீடு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (11-08-2019) நடைபெற்றது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவே தலைமை தாங்க, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நூலை வெளியிட்டார். இவ்விழாவில் […]

Read More

தமிழக விவசாயிகளுக்கு 10,000 கோடி பயிர்க்கடன் – பட்ஜெட் ஹைலைட்

by on February 8, 2019 0

தமிழ்நாடு அரசின் 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல் – அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (08-02-2019) சட்டசபையில் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்களிலிருந்து… கஜா புயல் ஏற்படுத்திச் சென்ற பாதிப்பைத் தணிப்பதற்கான தற்காலிக மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தேசியப் பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து மத்திய அரசு 900.31 கோடி ரூபாயை விடுவித்தது. இந்த நிதி ஆதாரங்களுடன் மாநிலத்தின் சொந்த நிதியையும் ஒருங்கிணைத்து, பயிர் தேசங்களுக்காக 774.13 கோடி ரூபாயும், உதவி நிவாரணத்திற்காக […]

Read More

ஓபிஎஸ் விஜயபாஸ்கர் தம்பிதுரைக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

by on January 11, 2019 0

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் எழுந்த சந்தேகங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.   இந்த விசாரணை ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்களிடம் நடத்தப்பட்டது.   அவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் […]

Read More