மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்குகிறார். இயக்குநர்கள் பூபதி பாண்டியன், சுசீந்திரன், கொரட்டால சிவா ஆகியோரிடம் பணியாற்றியவர் இவர். இப்படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்க, லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார், படத்தில் இருக்கும் வில்லன் பாட்த்திரத்துக்கான நீண்ட தேடலில் இருந்தார் இயக்குநர். சமீபத்தில் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பான ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் இரட்டை வேடத்தில் மிரட்டலான நடிப்பை தந்திருந்தார் நந்தா. தற்போது மேற்படி திரில்லர் படத்தில் […]
Read Moreவெளிநாட்டில் படமெடுத்தால் பார்க்கும் நமக்குக் கொண்டாட்டமாகத்தான் இருக்கும். ஆனால், படமெடுத்துவிட்டு வருவதற்குள் குழுவினர் படும் சிரமங்கள் சொல்லி மாளாது. அப்படி ஆர்.கண்ணன் மசாலா பிக்ஸுக்காக இயக்கி தயாரிக்கும் பெயரிடப்படாத படத்துக்காக அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரனுடன் அசர்பைஜானுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்திவிட்டு வந்திருக்கிறார். அங்கே சென்று சேர்வதற்குள் வழியில் துபாயில் கடும் மழையில் அதர்வா சிக்கிக் கொண்டது தனிக்கதை. அசர்பைஜானிலோ கடும் குளிர். மைனஸ் ஆறு டிகிரியாம். அத்துடன் மழையும் சேர்ந்துகொள்ள நேரம் இல்லாத காரணத்தால் பிரேக் […]
Read Moreநடிகர் அதர்வா எந்த புகாருக்கும் சிக்காத நடிகராக இதுவரை இருந்து வருகிறார். அத்துடன் ‘இயக்குநர்களின் நடிகர்’ என்ற அளவில் கிரியேட்டிவ் விஷயங்களிலும் நல்ல பெயரெடுத்த ஹீரோ. ஆனால், அவர் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்ததில் முளைத்தது பிரச்சினை. அவரது ‘கிக் ஆஸ் என்டர்டெயின்மென்ட்’ என்ற நிறுவனம் ‘எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து ‘செம்ம போத ஆகாதே’ என்ற படத்தைத் தயாரித்தார்கள். அங்கே ஆரம்பித்தது பிரச்சினை. ‘எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பாளரான வி.மதியழகன்தான் இன்று போலீஸ் கமிஷனரைச் சந்தித்து அதர்வா […]
Read More‘பாதையைத் தேடாதே… பாதையை உருவாக்கு…’ என்ற வாக்குக்கு ஏற்ப வாய்ப்புகளை தானே உருவாக்கிக்கொண்டு அடுத்தடுத்து பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். அதர்வாவை வைத்து வெற்றிப்படமான ‘பூமராங்’ கொடுத்துவிட்டு அடுத்த படத்தையும் அவரை வைத்தே இயக்குகிறார். அதர்வா முரளி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்கும் புதிய பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நேற்று (29-07-2019) சென்னையில் துவங்கியது. சென்னையில் பல இடங்களில் பதினைந்து நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, முக்கிய காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவும் […]
Read Moreஇன்றைய சினிமாவுலகில் இரு கலைஞர்கள் அடுத்தடுத்து இணைவது என்பது ஆகப் பெரும் அதிசயம். அப்படி இணைவதிலிருந்தே அவர்களின் புரிந்து கொள்ளலை நாம் புரிந்து கொள்ளலாம். அப்படி ‘பூமராங்’ படத்தில் இணைந்து ஒரு சமூக விழிப்புணர்வுப் படத்தைக் கொடுத்த ஆர்.கண்ணனும், நாயகன் அதர்வாவும் அடுத்தும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்பதுதான் கோலிவுட்டின் இன்றைய முக்கிய செய்தி. கடந்த படத்தில் முக்கிய சமுதாயப் பிரச்சினையை முன்வைத்த கண்ணன் இப்போது அதர்வாவுடன் கைகோர்த்து இனிய காதல் கதை ஒன்றைச் சொல்லவிருக்கிறார். இது […]
Read Moreஅதர்வா முரளி – ஹன்சிகா நடித்த ‘100’ பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றிருக்கிறது. நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படத்துக்கு, தற்போது திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரித்துள்ளனவாம். இது பற்றி படத்தைத் தயாரித்த ‘ஆரா சினிமாஸ்’ காவியா வேணுகோபால் கூறும்போது, “எல்லா இடங்களிலும் பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பைக் கண்டு நாங்கள் முழுமையாக பிரமித்துக் கொண்டிருக்கிறோம். விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பிலிருந்து தொலைபேசியில் அழைத்து படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பற்றி சிலாகித்து பேசுகிறார்கள். […]
Read More