April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கணவன் வீட்டிலேயே கைவரிசை காட்டி தலைமறைவான தெய்வமகள் நடிகை
September 16, 2020

கணவன் வீட்டிலேயே கைவரிசை காட்டி தலைமறைவான தெய்வமகள் நடிகை

By 0 508 Views
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்த மணிகண்டன் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து, வாய்ப்பு கிடைக்காததால் கார் டிரைவர் ஆனார்.
 
இந்நிலையில் தெய்வமகள் சீரியல் நடிகை சுசித்ராவுக்கு கார் ஓட்ட போய் மணிகண்டனுக்கு அவருடன் பழக்கம் ஏற்பட காதலித்து இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒன்றாக  வாழ்ந்து வந்துள்ளனர்.
 
கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் செலவுக்கு பணமின்றி இருவரும் தவித்து வந்த நிலையில் சொந்த ஊருக்கு மனைவி சுசித்ராவை, மணிகண்டன் அழைத்துச் சென்றார். மணிகண்டன் பெற்றோர் வீட்டில் சில நாட்கள் மனைவியுடன் தங்கி இருந்துள்ளார்.
 
Serial Actress Suchithra's Hubby Arrested

Serial Actress Suchithra’s Hubby Arrested

 
அப்போது அங்கு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை பார்த்ததும் கணவனிடம் அந்த பணத்தை கொள்ளையடித்து சென்னைக்கு சென்றுவிடலாம் என நடிகை சுசித்ரா ஐடியா கொடுத்து அந்த பணத்தை வைத்து குறும்படம் எடுத்து யூடியூப்பில் சம்பாதிக்க திட்டம் போட்டுக் கொடுத்துள்ளார்.
 
அதற்கு ஒத்துக்கொண்டு சுசித்ராவை மட்டும் சென்னைக்கு அனுப்பி வைத்த மணிகண்டன், சில நாட்களுக்கு பின் மனைவி சொன்னபடி பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துள்ளார்.
 
வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் காணாமல் போனதை அறிந்த மணிகண்டனின் பெற்றோர், போலீசில் புகார் கொடுத்துள்ளனர். விசாரணை நடத்தியதில் மணிகண்டன் தான் குற்றவாளி என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
 
பின்னர்  போலீசார் அவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
 
கணவன் போலீசிடம் சிக்கிக் கொண்டதை அறிந்த நடிகை சுசித்ரா தற்போது தலைமறைவாக இருக்கிறாராம். போலீசார் அவரை தேடி வருகிறார்கள் என்று தகவல்.
 
கணவன் வீட்டிலேயே திருட யோசனை சொன்ன சுசித்ரா தெய்வ மகளா… இல்லை, மனைவி சொன்னதைக் கேட்டு சொந்த வீட்டிலேயே கைவைத்த மணிகண்டன் தெய்வ மகனா நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.