April 19, 2024
  • April 19, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மணிரத்னம் தலைமையில் கௌதம் மேனன் கார்த்திக் நரேன் அரவிந்தசாமி கைகோர்க்கும் ஓடிடி வெப் சீரிஸ்
June 5, 2020

மணிரத்னம் தலைமையில் கௌதம் மேனன் கார்த்திக் நரேன் அரவிந்தசாமி கைகோர்க்கும் ஓடிடி வெப் சீரிஸ்

By 0 528 Views

சின்னத்திரையான ஓடிடி-யில் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

அமேசான் சார்பில்ல் வெப் சீரிஸாக வெளியாகவுள்ள இதன் பணிகள், கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது.

மணிரத்னம் இன்சார்ஜில் கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி மற்றும் கார்த்திக் நரேன் என 5 இயக்குநர்கள் உறுதியாகியுள்ளது. மீதமுள்ள 4 இயக்குநர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும்.

இதில் ஒரு கதையை இயக்குவதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் அரவிந்த் சாமி.

இந்த வெப் சீரிஸ் மூலமாக வரும் பணத்தை தொழிலாளர்களின் நலனுக்காகக் கொடுக்க மணிரத்னம் திட்டமிட்டு இருக்கிறாராம்