April 27, 2024
  • April 27, 2024
Breaking News
  • Home
  • கல்வி
  • Zoom செயலியை பதிவிறக்கம் செய்ய மாணவர்களை கட்டாயப் படுத்த கூடாது – ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன்
April 27, 2020

Zoom செயலியை பதிவிறக்கம் செய்ய மாணவர்களை கட்டாயப் படுத்த கூடாது – ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன்

By 0 1381 Views

கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள இந்த பொது முடக்க காலத்தில், அனைவரும் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எப்போது ஓயும் பொது முடக்கம் எப்போது முடியும் என்று தெரியாத நிலையில், தமிழகத்தில் சில ஆசிரியர்களும் பள்ளிகளும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த Zoom செயலியை அவர்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியானது.

ஒரு தொற்று நோயால் ஏற்பட்டுள்ள பொது முடக்கத்தால் ஏற்கெனவே மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை, ஆசிரியர்களின் இந்த நடவடிக்கை மேலும் பாதிக்கும். அதிலும், பாதுகாப்பற்ற zoom செயலியை கட்டாயமாக பதிவிறக்கம் செய்யச் சொல்லி பாடம் நடத்துவது என்பது மாணவர்களின் மனநிலையை மேலும் சிக்கலாக்கும் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “10 ஆம் வகுப்பு மாணவர்களை Zoom செயலி பதிவிறக்கம் செய்யக் கட்டாயப்படுத்துவதை கைவிட்டுவிட்டு அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் தினம் ஒருமணி நேரம் கல்வி ஓளிபரப்பு செய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் 10 ஆம்வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படும் என்று கூறி மாணவர்களைத் தொடர்புகொண்டு Zoom செயலியை பதிவிறக்கம் செய் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். ஆண்ட்ராய்டு செல்போன் இல்லாத மாணவர்கள் பெற்றோர்களை தொந்தரவு செய்கிறார்கள். பெற்றோர்கள் இயலைமையை எண்ணி ஒவ்வொரு நாளும் சாப்பாட்டிற்கே திண்டாடும் நிலையில் ஆண்ட்ராய்டு போன் எப்படி வாங்க முடியும்.

P.K.Ilamaran

P.K.Ilamaran

ஆன்லைன் வகுப்புகள் வரவேற்புக்குரியது அதேசமயம் அதனை செயல்படுத்தும் வசதிகளை ஆராயவேண்டும்.
வரும் அழைப்பை ஏற்பதைத் தவிர வேறு எதுவுமே தெரியாமல் மொபைல் போன் வைத்திருக்கும் பெற்றோரின் குழந்தைகள் ஆன்லைன் வகுப்பை எப்படி எதிர் கொள்வார்கள்?

மேலும் Zoom செயலி பாதுகாப்பானது அல்ல என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை சரியான வழிகாட்டுதல் இல்லாமல் பயன்படுத்தகூடாது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் Zoom செயலி மூலம் வகுப்புகள் நடத்தி அதில் தவறான படங்கள் வெளிபட்டு தொடர்பிலிருந்த அனைவரும் பார்க்க நேர்ந்ததால் ஏற்பட்ட விளைவுளால் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் Zoom செயலியை தடைசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.

வேலையிழந்து நிற்கும் நடுத்தர வர்க்கம், தினக்கூலி வேலைசெய்வோர் தங்கள் குழந்தைக்கு லேப்டாப், ஹெட்செட், வாங்கிக் கொடுத்து தனியறை என்பதே அறியாதவர்கள் அதிவேக இணைய இணைப்புடன் ஆன்லைன் வகுப்பை கவனிக்க வசதி செய்து கொடுப்பது சாத்தியமா? இந்த வாய்ப்புப்பெற்ற குழந்தைகள், வாய்பில்லாத குழந்தைகளின் நிலை? சம வாய்ப்பு மறுக்கப்படுமே. இந்த சிக்கல்களாலும் பொருளாதார காரணங்களாலும் இடை நிற்றல் அதிகரிக்கலாம்.

ஏற்கனவே வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு புதிய தலைவலியைக் கொடுக்கவேண்டாம்.

கல்வி தொடர்பு விட்டுவிடாமல் இருக்க தற்போது அரசு கல்வி டிவி, பொதிகை சேனல்களில் ஒளிபரப்புவது போல அனைத்து முதன்மை தொலைக்காட்சிகளிலும் தினம் ஒரு மணி நேரம் மாறுபட்ட நேரங்களில் கல்விக்காக ஒதுக்கி பாடம் நடத்தினால் பாதிப்பில்லாமல் கல்வி கற்க முடியும்.

ஆகையால் ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் Zoom செயலியை பதிவிறக்கம் செய்ய கட்டாயப்படுத்தி பெற்றோர்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்குவதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தடுத்து நிறுத்தியும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும்வரை தினம் ஒரு மணிநேரம் 10 ஆம் வகுப்பு பாடம் ஒளிபரப்பு செய்ய ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்…” என்று தெரிவித்துள்ளார்.